தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் கடந்த பல வருடங்களாகவே முன்னணி நடிகராக இருக்கும் மம்முட்டி அவ்வப்போது தமிழ்ப் படங்களில் நடிப்பதும் வழக்கம். ஆனால், அவர் கடைசியாக நடித்த தமிழ்ப் படமான 'வந்தே மாதரம்' வெளிவந்து ஐந்து வருடங்களாகிவிட்டது. அந்தப் படமும் நீண்ட காலம் தயாரிப்பில் இருந்து வெளிவந்ததால் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டது. லிங்குசாமி இயக்கிய முதல் படமான 'ஆனந்தம்' படம்தான் மம்முட்டி தமிழில் கடைசியாக நடித்து வெற்றி பெற்ற படம்.
மம்முட்டிக்கு தமிழில் ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. 90களில் அவர் நடித்து நேரடியாக வெளிவந்த மலையாளப் படங்கள் கூட தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடியதுண்டு. இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மம்முட்டி மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார். 'தரமணி' படத்திற்குப் பிறகு ராம் இயக்க உள்ள புதிய படத்தில் மம்முட்டிதான் கதாநாயகன். ஆன்ட்ரியா, அஞ்சலி இருவரும் கதாநாயகிகளாக நடிக்க உள்ளார்கள். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.