என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு |
'லிங்கா' படம் வெளியான பிறகு எழுந்த பிரச்சனைகளின்போது பத்திரிகைகளில் அதிகம் அடிபட்ட பெயர் திருச்சி ஏரியாவின் விநியோகஸ்தர் சிங்காரவேலன்.
தற்போது 'பாயும் புலி' படத்துக்கு தியேட்டர் அதிபர்கள் ரெட் போட்டுள்ள விவகாரத்தில் மீண்டும் சிங்காரவேலன் பெயர் அடிபட துவங்கி உள்ளது.
பாயும்புலி பட வெளியீட்டிற்கு எதிராகவே சிங்காரவேலன் பிரச்சனைகள் செய்வதாகக் கூறி சென்னை நகர காவல்துறை ஆணயரிடம் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து மனு கொடுக்கப்பட்டுள்ளது.
''வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் எஸ்.மதன் தயாரித்து செப்டம்பர் 4ஆம் தேதி வெளிவரவுள்ள திரைப்படம் பாயும் புலி. இத்திரைப்படத்திற்கான வெளியீட்டுப் பணிகள் நடைபெற்று வரும் வேளையில், 'லிங்கா' திரைப்பட வெளியீட்டு வகையில் தனக்கு சேரவேண்டிய தொகையைப் பெற்றுக்கொண்ட விநியோகஸ்தர் சிங்காரவேலன், மேலும் தனக்கு தொகை வேண்டுமென மிரட்டி 'பாயும் புலி' திரைப்படத்தை வெளியிடக்கூடாது என கூறி வருகிறார். ஆகையால், தமிழ்நாடு முழுவதுமுள்ள திரையரங்க உரிமையாளர்களை மிரட்டியும், பொதுமக்களுக்கு மேற்கண்ட திரைப்படம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பியும் வரும் விநியோகஸ்தர் சிங்காரவேலன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக காவல்துறை ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தன் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் குறித்து சிங்காரவேலன் ஒரு ஆடியோ பதிவை அனுப்பி வைத்திருக்கிறார்.