‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தனது வாரிசுகளான மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து ஆகியோரை களத்தில் இறங்கி விட்டுவிட்டார் வைரமுத்து. அதில் மதன் கார்க்கி பல ஹிட் பாடல்களை கொடுத்திருப்பதோடு, பாகுபலி உள்பட சில படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். இப்படி வாரிசுகள் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தபோதும், வைரமுத்துவின் பாட்டுப்பயணம் எந்தவித தொய்வும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், விஜய் படங்களுக்கு பெரும்பாலும் பாடல்கள் எழுதாத அவர், இப்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார். அதோடு விஷாலின் பாயும்புலி படத்திற்கும் வைரமுத்துதான் பாடல் எழுதியிருக்கிறார். ஆக, ரஜினி போன்ற நடிகர்களின் படங்களில் பெரும்பாலும் ஓப்பனிங் பாடல், தத்துவப்பாடல் என்று எழுதியுள்ள வைரமுத்து, இந்த புலி படத்தில் விஜய்க்காக ஒரு புரட்சிகரமான பாடலை எழுதியிருக்கிறார். இந்த பாடல் விஜய் ரசிகர்களிடம் போய் சேர வேண்டும் என்பதற்காக, பாட்ஷாவில் ரஜினிக்காக எழுதிய ஆட்டோக்காரன், ரா ரா ராமைய்யா பாடல்களைப்போன்று எளிதில் புரியும் வகையிலான வார்த்தைகளை கோர்த்து எழுதியிருப்பதாக சொல்கிறார் வைரமுத்து.