மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிவுட்டில் விரைவில் வெளியாக இருக்கும் 'கட்டி பட்டி' என்கிற படத்தின் சிறப்பு காட்சியை சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு திரையிட்டு காட்டினார்கள். படம் பார்த்துவிட்டு வெளியேவந்த அமீர்கான் கண்களில் கண்ணீர்.. அந்த அளவுக்கு படம் அவரை பாதித்திருந்தது.. அதை அவர் மனம் திறந்து வெளியே சொல்லவும் செய்தார்.. ஆனால் உடனே சோஷியல் மீடியாவில் அவரது கருத்தை கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால் அந்தப்படத்தின் கதாநாயகியாக நடித்த கங்கனா ரனாவத், அமீர்கான் அழுததில் வியப்பொன்றும் இல்லை என கூறியிருக்கிறார். காரணம் அந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்த நாட்களில் ஷூட்டிங் முடிந்த தினம் பல இரவுகளில் அதில் நடித்த தானே பலமுறை கண்ணீர்விட்டு அழுததாகவும், தன் தாய் ஒவ்வொருமுறையும் தன்னை தேற்றி ஆசுவாசப்படுத்தியதாகவும் கூறியுள்ளார் கங்கனா. அந்த அளவுக்கு மனதை கரைக்கும் விதமான கதையாம் இந்தப்படத்தினுடையது..