இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டோலிவுட்டில் நடிகர் மகேஷ் பாபு நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த ஸ்ரீமந்துடு படத்தில் கிராமங்களை தத்தெடுத்து அவற்றிற்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. அதனை நிஜத்தில் பின்பற்றும் விதமாக படத்தின் நாயகன் மகேஷ் பாபு ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள புர்ரிபேலம் எனும் தனது சொந்த கிராமத்தை தத்தெடுத்துள்ளார். அதே போல் நாயகி ஸ்ருதிஹாசனும் தமிழகத்தில் ஒரு கிராமத்தை தத்தெடுக்க பரிசீலனை செய்து வருகின்றாராம். திரைத்துறை தாண்டி பல சமூக சேவைகளை செய்து வரும் நடிகரும் ஸ்ருதிஹாசனின் தந்தையுமான கமலஹாசன் தான் தனது இந்த தத்தெடுக்கும் திட்டத்திற்கு காரணம் என்று ஸ்ருதி கூறியுள்ளார். தற்போது தமிழகத்தில் எந்த கிராமத்தை தத்தெடுப்பது என்ற தீவிர ஆலோசனையில் ஸ்ருதி ஈடுபட்டுள்ளாராம். எந்த கிராமத்தை தத்தெடுப்பது என்று முடிவு செய்தபின் அதற்கான அடுத்த கட்ட பணிகள் துவங்கப்படும் என்றும் ஸ்ருதி கூறியுள்ளார்.