தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திரையுலகில், 1980களில் பிரபலமாகியிருந்த நடிகர், நடிகையரின், ஆறாம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது; மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். திரையுலகில், 1980களின் பிரபலமான நடிகர், நடிகையர், ஆண்டுதோறும், சென்னையில் சந்தித்து, மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்வது வழக்கம்.
அதன்படி, ஆறாம் ஆண்டு சந்திப்பு, கிழக்கு கடற்கரை சாலையில், ஆலிவ் பீச் அருகே உள்ள, நீனா ரெட்டி கெஸ்ட் ஹவுசில் நடந்தது. சிரஞ்சீவி, மோகன் லால், வெங்கடேஷ், பாக்யராஜ், சத்யராஜ், பிரபு, மோகன், சரத்குமார், நரேஷ், பிரதாப் போத்தன், ஜெயராம், ரகுமான், சுமன், ராஜ்குமார், பானுசந்தர், நடிகைகள், லிசி, குஷ்பு, சுகாசினி, சுமலதா, சரிதா, ராதா, ராதிகா, ரம்யாகிருஷ்ணன், பூர்ணிமா, மேனகா, பார்வதி, ஜெயஸ்ரீ, ஜெயசுதா, என, 34 பேர் பங்கேற்றனர். அனைவரும், சிவப்பு நிறத்திலான ஆடைகள் அணிந்திருந்தனர்; அரங்கமும் சிவப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மும்பை, பாலிவுட்லிருந்து, ஜாக்கி ஷெராப், பூனம் தில்லான், சுவப்னா ஆகியோர், இந்த ஆண்டு முதன் முதலாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில், நடிகர், நடிகையரின் திரையுலக பயணம் குறித்த, 10 நிமிட, வீடியோ கிளிப்பிங்ஸ் ஒளிபரப்பானது. தமிழ், இந்தி, மலையாளப் பாடல்களுக்கு நடிகர், நடிகையர் ஜோடி சேர்ந்து ஆடினர்.