ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் மட்டுமல்லாது இன்றளவும் நிஜ வாழ்க்கையில் கூட அரவிந்த்சாமியின் அழகைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுபவர்கள் அதிகம்தான். 24 வருடங்களுக்கு முன்பு மணிரத்னம் இயக்கிய 'தளபதி' படத்தில் ரஜினிகாந்த் தம்பியாக நடித்து திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் அவர் நாயகனாக நடித்த'ரோஜா, மறுபடியும்' ஆகிய படங்கள் வெற்றி பெற்று அவருக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தன. இளம் பெண்களின் மத்தியில் அப்போது தனக்கென தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார். தொடர்ந்து சில தோல்விப் படங்களில் நடித்தாலும் 1997ல் வெளிவந்த 'மின்சார கனவு' அவருக்கு மீண்டும் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியைத் தந்தது. அதன் பின் 2000மாவது ஆண்டில் வெளிவந்த 'அலைபாயுதே' படத்திற்குப் பிறகு அரவிந்த்சாமி திரையுலகத்தை விட்டு விலகிவிட்டார். இடையில் எப்போதோ முடிந்த 'சாசனம்' படம் மட்டும் வெளிவந்தது.
அதன் பின் அவரை பல வருடங்களாக கோலிவுட் பக்கம் கூடப் பார்க்க முடியவில்லை. சில வருடங்களுக்கு முன்தான் மீண்டும் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். அப்போது அவரைப் பார்த்தவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். மிகவும் குண்டாகி, தலையில் வழுக்கை விழுந்து ஆளே மாறிப் போயிருந்தார். மீண்டும் மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். அந்தப் படத்தில் கூட கொஞ்சம் குண்டாகத்தான் தெரிந்தார். ஆனால், இப்போது வெளிவந்துள்ள 'தனி ஒருவன்' படத்தில் சரியான தோற்றத்துடன் மீண்டும் ஒரு ஹீரோவுக்குரிய அழகுடன் மீண்டும் ஒரு ரீ-என்ட்ரியைக் கொடுத்து அசத்தியிருக்கிறார்.