விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் தயாரித்த சமீபத்திய படங்கள் எதுவுமே எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.
எனவே படத்தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்திவிட்டு சினிமா தியேட்டர் பிசினஸில் கவனம் செலுத்தவிருப்பதாக திரையுலகில் தகவல் அடிபட்டது.
அதை உண்மையாக்குவதுபோல் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் புதிய படங்கள் எதையும் தொடங்கவில்லை.
ஏற்கனவே ஆரம்பித்த ஒவ்வொரு படங்களையும் ரிலீஸ் செய்து வந்தனர்.
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் தயாரித்த படங்கள் அனைத்தும் வெளியாகிவிட்டநிலையில் தனி ஒருவன் படம் மட்டும் வெளியாகாமலே இருந்தது.
17 கோடி பட்ஜெட்டில் தொடங்கிய தனி ஒருவன் படத்தை 26 கோடி அளவுக்கு செலவை அதிகமாகிவிட்டார் என்று தயாரிப்பாளர் கடுப்பில் இருப்பதாக சொல்லப்பட்டது.
நேற்று வெளியான தனி ஒருவன் படத்துக்கு செம ரிசல்ட்.
ஐபிஎஸ் அதிகாரியாக ஜெயம் ரவி நடித்திருக்கும் இப்படத்திற்கும் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அதோடு விமர்சகர்களிடத்திலும் 'தனி ஒருவனு'க்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன.
அண்ணன் ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் தம்பி ஜெயம் ரவி நடித்து இதுவரை 'ஜெயம்', 'எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி', 'சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்', 'சந்தோஷ் சுப்ரமணியம்', 'தில்லாலங்கடி' என ஆறு படங்கள் வெளிவந்திருக்கின்றன.
இவற்றில் தில்லாலங்கடி தவிர ஐந்து படங்கள் சூப்பர்ஹிட்.