பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சின்னத்திரையின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் திருச்செல்வம், தேவயானி நடித்த கோலங்கள், கைராசி குடும்பம் உள்பட பல தொடர்களை இயக்கி உள்ளார். தற்போது பல தொடர்களில் நடித்தும் வருகிறார்.
திருச்செல்வத்தின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பேராவூரணி. சொந்த வேலையாக காரில் பேராவூரணி சென்ற திருச்செல்வம் நேற்று அங்கிருந்து சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிந்தார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது காருக்கு முன்னே சென்ற ஒரு ஆட்டோ திடீரென பிரேக் போட்டு நின்றதால் வேகமாக சென்ற திருச்செல்வத்தின் கார் ஆட்டோவின் மீது மோதியது. இதனால் ஆட்டோ சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்தது. திருச்செல்வத்தின் கார் டிரைவரின் சாமர்த்தியத்தால் பள்ளத்தில் பாயாமல் தப்பியது.