தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றிக்கு பின்னர் தனது குடும்பத்தினருடன் தாய்லாந்திற்கு ஓய்வெடுக்க சென்றுள்ளார். தனது மனைவி நர்மதா,மகன் கௌதம் கிருஷ்ணா,மகள் சித்தாராவுடன் விடுமுறையைக் கழித்து வரும் மகேஷ் பாபு தனது மகன் கௌதமின் பிறந்தநாளை தாய்லாந்தில் உள்ள கோய் சமுயி தீவில் கொண்டாட திட்டமிட்டுள்ளார். ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரும் தனது மகன் கௌதம் கிருஷ்ணாவின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடவும் மகேஷ் பாபு முடிவு செய்துள்ளாராம். ஓய்விலிருந்து திரும்பியதும் மகேஷ் பாபு பிரமோற்சவம் படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கும் இப்படத்தை பிவிபி நிறுவனத்துடன் இணைந்து மகேஷ் பாபு தயாரிக்கின்றார். நடிகைகள் சமந்தா, பிரனிதா, காஜல் அகர்வால் ஆகியோர் இப்படத்தில் நாயகிகளாக நடிக்கவுள்ளனர். செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.