டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அட்டகத்தி நந்திதா எப்படி பெங்களூரில் மாடர்ன் பெண்ணாக வளர்ந்தாரோ, அதேபோல்தான் காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேசும் சென்னை சிட்டியில் வளர்ந்த மாடர்ன் பெண். அதோடு இப்போது வரை நந்திதாவுக்கு எப்படி மாடர்ன் கதைகள் கிடைக்கவில்லையோ அதேபோல் ஐஸ்வர்யாவுக்கும் மாடர்ன் கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. ஏற்கனவே நடித்த பண்ணையாரும் பத்மினியும், ரம்மி போன்ற படங்களில் வில்லேஜ் கெட்டப்பில் நடித்தவர் இப்போது இடம் பொருள் ஏவல், குற்றமும் தண்டனையும், தீபாவளி துப்பாக்கி, ஹலோ நான் பேய் பேசுறேன் ஆகிய படங்களிலும் வில்லேஜ் ரோலில்தான் நடித்திருக்கிறார்.
அதனால், தன் மீது விழுந்துள்ள கிராமத்து முத்திரையை அகற்ற வேண்டும் என்று நந்திதா முயற்சிப்பதை போன்று ஐஸ்வர்யா ராஜேசும் தீவிர முயற்சி எடுக்கத் தொடங்கியிருக்கிறார். அதனால், சினிமா வட்டாரங்களில் யாரை சந்திக்க சென்றாலும், படுகவர்ச்சியான உடைகளை அணிந்து செல்லும் அவர், உடம்பு முழுக்க கவர் பண்ணி நடிக்கும் கதாநாயகியாக நடிக்க சொல்பவர்களிடம், நான் சிட்டி கல்ச்சரில் வளர்ந்த பெண். அதனால் கிளாமர் கலந்த ஹீரோயினி வேடங்கள் கொடுங்கள் என்று கேட்கிறார். மேலும், எனக்கு ஒன்றும் கிளாமராக நடிக்க ஆசையில்லை. ஆனால் இன்றைக்கு தியேட்டருக்கு வருபவர்களே இளவட்ட ரசிகர்கள்தான். அதனால் அவர்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் நான் மாடர்ன் கெட்டப்புக்கு மாறினால்தான் முடியும் என்றும் தனது மனநிலையை சொல்லி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.