பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தமிழ், தெலுங்கில் முன்னணியில் இருக்கும் நடிகைகளுக்கிடையே படங்களை கைப்பற்றுவதில் திரைக்குப்பின்னால் ஒரு களேபரமே நடந்து கொண்டிருப்பது வாடிக்கை. அந்த வகையில், சில நடிகைகள் டைரக்டர்களுடன் நட்பு வளர்ப்பார்கள். இன்னும் சிலர் மெகா ஹீரோக்களை வசப்படுத்தி வைத்திருப்பார்கள். அந்த வகையில், சமீபகாலமாக முன்னணியில் இருக்கும் சமந்தா, காஜல்அகர்வால், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கிடையே புதிய படங்களை கைப்பற்றுவதில் பெரிய போரே நடந்து கொண்டிருக்கிறது.
இதில், சமந்தா தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்தபோது ஸ்ருதிஹாசனுக்கும், அவருக்குமிடையே மெகா ஹீரோக்களின் படங்களை கைப்பற்றுவதில் பெரும் போட்டி நிலவியது. ஆனால் இப்போது சமந்தா தமிழுக்கு வந்து விட்டதால் அவர்களுக்கிடையிலான போட்டி இல்லை. மாறாக, காஜல்அகர்வால் அவருக்கு போட்டி நடிகையாகியிருக்கிறார். தமிழில் தனது மார்க்கெட் மந்தமாக இருப்பதால் தெலுங்கிலாவது மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்வோம் என்று இப்போது ஆந்திராவில் முகாமிட்டிருக்கிறார் காஜல்அகர்வால்.