பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை |
தமிழ் சினிமாவின் பிதாமகன் கே.பாலச்சந்தர். அரை நூற்றாண்டு சினிமாவில் பயணித்து பல சாதனைகளை படைத்த தன்னிகரில்லா படைப்பாளி. 100 படங்களுக்கு மேல் இயக்கி, தமிழ் சினிமாவுக்கு பல நட்சத்திரங்களையும், காலத்தால் அழிக்க முடியாத காவியங்களையும் கொடுத்த கே.பாலச்சந்தருக்கு சினிமாவின் கதவுகளை திறந்து விட்டு பாதையும் அமைத்துக் கொடுத்த படம்.
நாடக உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த கே.பாலச்சந்தர் கன்னித்தாய் படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம் சினிமாவுக்கு வந்தார். தான் நடத்தி வந்த நீர்க்குமிழி நாடகத்தையே தனது முதல் படமாக இயக்கினார். ஒரு சிறிய மருத்துவமனை அதில் 7ம் நம்பர் வார்டில் உள்ள புற்று நோயாளி நாகேஷ். அவரைச்சுற்றி சில கதாபாத்திரங்கள், வெளிநாட்டுக்கு சென்று மருத்துவத்தில் மேற்படிப்பு படிக்க தயாராகிக் கொண்டிருக்கும் சவுகார் ஜானகி. அவரது தந்தை டாக்டர் மேஜர் சுந்தர்ராஜன். காலில் அடிபட்டு சிகிச்சைபெறும் கால்பந்து வீரா வி.கோபாலகிருஷ்ணன், நர்ஸ் ஜெயந்தி. இவர்கள்தான் முக்கிய கேரக்டர்கள். இந்த கேரக்டர்களை வைத்துக் கொண்டு நாகேஷ் மூலமாக வாழ்க்கையின் பல பரிமாணங்களை காட்டுகிற படம் இது. காமெடி, சென்டிமென்ட் என்ற இரு தண்டவாளத்தில் தடம் புரளாமல் செல்கிற கதை.
கால்பந்து வீரர் கோபாலகிருஷ்ணன், டாக்டர் சவுகார் ஜானகிக்கு இடையே உருவாகும் மென்மையான காதல், நாகேசுக்கும், ஜெயந்திக்கும் இடையே இழையோடும் நகைச்சுவை காதல். என படம் முழுக்க ஜாலியாக சென்று இறுதியில் நாகேஷ் மரணத்தை தழுவும் நேரத்தில் வாழ்க்கை பற்றிய பல உண்மைகளை ஒளிவுமறைவின்றி சொல்லிவிட்டு போகும் படம்.