Advertisement

சிறப்புச்செய்திகள்

'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ரஜினி அல்லது அஜித் நடிப்பில் படம் இயக்க ஆசை: சிம்பு

23 ஆக, 2015 - 04:15 IST
எழுத்தின் அளவு:
Rajini-or-Ajith--movie-starring-:-Simbu

தமிழ் சினிமாவில், லிட்டில் ஸ்டார், யங் சூப்பர் ஸ்டார் என்ற நிலையில் இருந்து இப்போது, எஸ்.டி.ஆர்., என, அழைக்கப்படுபவர் நடிகர் சிம்பு. காதல் முறிவு, பட ரிலீஸ் பிரச்னை, பண பிரச்னையை எல்லாம் கடந்து, ஆன்மிகத்தில் அளவிலா ஆனந்தம் கொள்ளும் சிம்பு அளித்த பேட்டி:


பல போராட்டங்களை தாண்டி, வாலு படம் வெளியாகிஉள்ளது; உங்களின் அடுத்த திட்டம் என்ன?


மூன்றரை ஆண்டுகள் கழித்து, ஒரு படம் வந்தால், மக்களிடம் ஒரு தொய்வு வந்து விடும். ஆனால், அதையெல்லாம் மீறி, வாலு படத்துக்கு முதல், இரண்டு, மூன்று நாளில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்றால், கடவுள் அனுக்கிரகம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த


ரசிகர்களை, நான் இருக்கும் வரை விட்டுக்கொடுக்க மாட்டேன். கண்டிப்பாக அவர்களுக்காக நல்ல, நல்ல படங்கள் தருவேன்.


இனி ஆண்டுக்கு எத்தனை படங்களில் நடிப்பீர்கள்?




எப்படியும் ஆண்டுக்கு, இரண்டு, மூன்று படங்கள் தர வேண்டும் என்ற முயற்சியில் உள்ளேன்; அதற்கான உழைப்பில் இறங்கி உள்ளேன்.


படப்பிடிப்புக்கு தாமதமாகவருவதாக, உங்கள் மேல் புகார் உள்ளதே?




நிறைய பேர் இப்படி சொல்கின்றனர். அது உண்மை தான்; நான் மறுக்கவில்லை. சினிமா வேலை எப்படி என்றால், காலையில், 10:00 மணிக்கு போகும் ஆபீஸ் வேலை இல்லை. இன்று இந்த காட்சி எடுக்க போகின்றனர் என்று கூறினால், அதற்கு என்னை முதலில் தயார்படுத்தி விட்டு, அங்கு போய் நிற்க வேண்டும்.


அந்த மன நிலைக்கு தயாராகவில்லை என்றால், எவ்வளவு இழப்பானாலும் அங்கு போகவே மாட்டேன். அன்று ஒரு நாள் என்னால், படப்பிடிப்பு நின்றாலும் பரவாயில்லை. ஆனால், படத்தில் நான் அந்த கதாபாத்திரத்தை மனசாட்சிபடி நடித்து கொடுக்கவில்லை என்றால், தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய இழப்பாகும். இது ஒரு காரணம்.


இன்னொரு காரணம், சரியான நேரத்துக்கு ஏன் போகவில்லை என்றால், அதுவும் சினிமாவாக தான் இருக்கும். முதல் நாள் இரவு, விடிய, விடிய இசையமைப்பாளருடன் வேலையில் இருந்திருப்பேன் அல்லது, எடிட்டிங். இப்படி ஏதாவது, ஒரு வேலையில், நான் அந்த நேரத்தை செலவு செய்திருப்பேன். அப்படிதானே தவிர, வேண்டும் என்றே படப்பிடிப்புக்கு தாமதமாக போக வேண்டும் என்ற எண்ணம் மனதில் கிடையாது.


சூப்பர் ஸ்டாராக வரவேண்டும் என்றஉங்களின் ஆசை?


முன்பு அப்படி ஒரு ஆசை இருந்தது உண்மை. ஆனால், இப்போது நான் கடவுளை நம்புகிறேன். அவர் எடுக்கும் முடிவு தான். என்னை, சூப்பர் ஸ்டார் ஆக்கலாம்; அல்லது அதற்கு மேலயும் கொண்டு போகலாம்.


ஆன்மிகம் பக்கம் கவனம் செலுத்திய பின், பார்ட்டி, கேளிக்கை விருந்து குறைந்து விட்டதா... இல்லை, அதுவும் தொடர்கிறதா?




நமக்கு வெப்பமும் வேண்டும், குளிரும் வேண்டும். வெறும் குளிர் மட்டும் இருந்து பயன் இல்லை. அது தான், சிவன், பார்வதி என்று கூட சொல்லலாம். இது நல்லது, இது கெட்டது என்று முடிவு எடுக்கிறோமே, அதுதான் நம் முட்டாள் தனம் என, நினைக்கிறேன். இரண்டு அனுபவங்களும், நம் வாழ்க்கைக்கு தேவை என்பதை, இந்த பிரபஞ்சத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.


நீங்க விட்ட இடைவெளியில் தான், இப்போது ஏராளமான புது, ஹீரோக்கள்வந்துள்ளனரே?




நல்ல விஷயம் தானே;என்னால, நான்கு, ஹீரோக்கள் ஜெயித்து வருகின்றனர். தயாரிப்பாளர்களுக்கும், லாபம் கிடைத்தால் நல்லது தானே. ரஜினி அப்படி ஒரு இடைவெளி தரவில்லை என்றால் மற்ற, ஹீரோக்கள் வந்திருக்கமுடியுமா. அதனால், இந்தவிஷயத்தை, போட்டியாக எடுத்துக் கொள்வதைவிட, சந்தோஷமாக எடுத்துக் கொள்கிறேன்.


ஒரு பேட்டியில், காதலை இழந்தேன், பணத்தை இழந்தேன், பட வாய்ப்புகளை இழந்தேன் என்று கூறினீர்கள். இப்போது இருக்கும் மனநிலையில், மீண்டும் நயன்தாரா, ஹன்சி காவை நினைத்து பார்க்க வாய்ப்பு உள்ளதா?




தெளிவாகச் சொல்கிறேன், இத்தனை நாள் நான் தேடி போனேன்; எனக்கு, செட் ஆகவில்லை. இப்போது, எல்லாவற்றையும் கடவுளிடம் கொடுத்து விட்டேன். இனி அவர் எனக்கு நல்லதே செய்வார். வரும்போது பார்ப்போம், இல்லப்பா... நீ தனியாகவே இரு. அதுதான் நல்லது என, அவர் முடிவு எடுத்தால், தனியாகவே இருப்பேன்.


ஆன்மிகத்தில் நாட்டம் வந்த பின், கோபம் கொஞ்சம் குறைந்து இருக்க வேண்டுமே?




அப்படி கிடையாது. கோபம் வரும்; வரவேண்டும். வராமல் எல்லாம் இருக்காது. ஒரு


வித்தியாசம் உணர்ந்தேன். முன்பு கோபம் வந்தால், எதனால் வருகிறது என, தெரியாது.


இப்போது எதனால் வருகிறது என தெரியும். காரணம் தெரிவதால், அதற்கேற்றபடி பக்குவமாக செயல்படுகிறேன்.


காதலிக்கும் யாராவது உங்களிடம் யோசனையோ அல்லது அறிவுரையோ கேட்டால் என்னசொல்வீர்கள்?




லவ் பண்ணுவது நல்ல விஷயம். ஆனால், யாரை, லவ் பண்ணுகிறாய் என்பதே நீ முடிவு எடு என்பேன்.


பெரும்பாலும் காதல் முறிவுக்கு பின், பிரிந்துவிடுவார்கள். ஆனால், நயன்தாரா, ஹன்சிகா விஷயத்தில் நட்பு புதுப்பிக்கப்படுகிறதே எப்படி?




எந்த, நெகட்டிவான விஷயத்திலும் நாங்கள் பிரியவில்லை. வாழ்வியல் சூழ்நிலைகளால் தான், பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது இரண்டு பேரும் கோபித்து கொண்டு, முகத்தை துாக்கி வைத்துக் கொண்டு, போறஅளவுக்கு நான் எந்த தப்பும் செய்யவில்லை. அதனால் தான், அவர்கள் என்னிடம் திரும்ப வந்து பேசுகின்றனர். பொதுவாகவே,பெண்களுக்கு என்னை பிடிக்கும்.


சில படங்களை இயக்கி உள்ளீர்கள். படம், வெற்றியும் பெற்றுள்ளது. அடுத்து வேற ஒரு, ஹீரோவை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டால், யாரை வைத்து படம் இயக்குவீர்கள்?


ரஜினியை வைத்து இயக்கு வேன், அல்லது, தலயை (அஜித்) வைத்து இயக்க ஆசை.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in