இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
அதிரடிக்குப் பெயர்போன உபேந்திரா யாரென்று தெரியாதவர்களுக்கு விஷால் நடித்த 'சத்யம்' படத்தில் மிரட்டல் போலீஸ் ஆஃபிஸராக வந்தாரே அவர்தான் இவர். இங்கே தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் ஹிட்டுக்களான அஜித்தின் 'வரலாறு', லாரன்ஸின் 'காஞ்சனா' ஆகியவற்றின் கன்னட ரீமேக்குகளில் நடித்து செமத்தியான கல்லா கட்டியவரும் இவரேதான். கன்னட திரையுலகில் உபேந்திரா நடிக்கிற படம் ரிலீஸ் ஆகிறது என்றாலே ஒரு பரபரப்பு கிளம்பும்.
காரணம் அவருடைய ஆக்ஷனும் காமெடியும் அந்தமாதிரி ரணகளமாக இருக்கும். அதேமாதிரி அவர் வசனம் பேசுகிற ஸ்டைலை ரசிப்பதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டமும் இருக்கிறது. இப்போது 'உப்பி-2' என்கிற படத்தை அவரே இயக்கி நடித்தும் வருகிறார்.. அதென்ன 'உப்பி-2' என்கிற சந்தேகம் உங்களுக்கு எழலாம். 1999ல் இவர் நடிப்பில் வெளியான 'உபேந்திரா' என்கிற சைக்காலஜிகல் த்ரில்லர் படத்தின் இரண்டாம் பாகம் தான் இது.
இப்போது விஷயம் என்னவென்றால் உபேந்திரா பட ரிலீசாகும் அதே நாளில் தான் மகேஷ்பாபு நடித்துள்ள 'ஸ்ரீமந்துடு' படமும் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் உபேந்திரா படங்கள் என்றால் கன்னட தியேட்டர்களில் முக்கால்வாசி உபேந்திராவுக்கே சரியாக போய்விடும். ஆந்திராவை பொறுத்தவரை அவர்களது படங்களின் இரண்டாவது மார்க்கெட் கர்நாடகா தான். அதனால் இந்த நேரத்தில் மகேஷ்பாபு படத்தை ரிலீஸ் பண்ணினால் கர்நாடகாவில் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கலாகிவிடும். ஆகவே ஒரு வாரம் தள்ளி மகேஸ்பாபு படத்தை ரிலீஸ் பண்ண முடிவு செய்துள்ளார்களா. ஏற்கனவே பாகுபலி' படத்திற்காகவும் 'ஸ்ரீமந்துடு' படத்தின் ரிலீஸை தள்ளிவைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.