'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீப காலமாக பெருகி வரும் பேய் படங்களின் வரிசையில் படம் முடிந்து வெளி வர தயாராகும் நிலையில் உள்ள படம் ஜின். நகைச்சுவை மிளிர சொல்லப்படும் ஜின் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் புதுமுகம் டாக்டர் மாயா. சிரிப்பில் எவரையும் மயக்கும் வல்லமைக் கொண்ட டாக்டர் மாயா, ஒரு பல் மருத்துவர் என்பதுக் குறிப்பிடத்தக்கது. அவர் சார்ந்த தொழில் இருந்து சினிமா மேல் உள்ள காதலால் ஜின் மூலம் திரைக்கு அறிமுகமாகும் டாக்டர் மாயாவின் வார்த்தைகள் இதோ....
எனக்கு இயக்குனர் முருகதாஸின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதே பெரிய ஆசை. கஜினி படத்தின் நாயகி கல்பனா போல் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டோமா என்ற ஏக்கம் எனக்குள் இருக்கவே செய்கிறது. அதிலும் எனக்கு மிகவும் பிடித்தமான சூர்யா சாருடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதும் கனவு. எனக்கு பிடித்த கதாநாயகி ஜெனிலியாதான். அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் இயல்பாகவே டீன் ஏஜ் இளம் பெண்கள் போலவே இருக்கும். அந்த நடிப்பை அவர் தான் பிரமாதமாக பிரதிபலிக்கிறார். என் கல்லூரி தோழிகள் பலர் அவரை போலவே நடித்தும், நடந்தும் கொள்வர்.
ஜின் படத்தை தொடர்ந்து என் அடுத்த படத்துக்காக நான் ஏகப்பட்ட கதைகள் கேட்டு வருகிறேன். பெயர் வாங்கும் அளவுக்கு பாத்திரம் இருந்தால் நிச்சயம் ஏற்றுக் கொள்வேன். ஜின் படத்தில் என்னுடைய அனுபவங்கள் ஏறத்தாழ படத்தின் மைய கதையான பேய் கதை போலதான். காளி வெங்கட், காதலில் சொதப்புவது எப்படி அர்ஜுனன், முண்டாசுப்பட்டி முனீஸ்காந்த், மெட்ராஸ் ஜானி என்ற வளர்ந்து வரும் நகைசுவை கலைஞர்களுடன் 40 நாட்கள் படப்பிடிப்பு என்றால் எப்படி இருக்கும். சிரித்து சிரித்து வயிற்று வலி தான். இவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை கதாநாயகர்கள் ரமீஸ் ராஜாவும், மெட்ராஸ் கலையும். தொடர்ந்து 40 நாட்களும் சில்லிடும் இரவுகளில் நடுக்காட்டில் படப்பிடிப்பு என்றாலும், இவர்களின் கலாட்டாவால் படம் முடிந்ததே தெரியவில்லை.
ஒரு வித்தியாசமான அனுபவம் என்ன வென்றால், ஒரு நள்ளிரவு படப்பிடிப்பில் இருந்தபோது ஒரு தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. தெரியாத எண் என்பதால் சற்றே தயங்கித்தான் அழைப்புக்கு செவி சாய்த்தேன். யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே பேசினால் நடுங்கும் குரலில் ஒரு பெண். என்ன வென்று விசாரித்தால் எனக்கு பல் வலி, வைத்தியம் பாப்பிங்களா என்றுக் கேட்டது. என்ன பிரச்சனை என்றுக் கேட்டேன். நான் ரத்த காட்டேரி , எனக்கு பல் வலி. இதனால் மற்றவர்கள் கழுத்தை கடித்து ரத்தம் குடிக்க இயலவில்லை என்று கேட்டு விட்டு கட கட என சிரிக்க ஆரம்பித்தது. நான் அவ்வளவுதான், அம்மா ...அப்பா என்று கத்தி விட்டேன்.
பயத்தால் காய்ச்சல் வந்தே விட்டது. விளையாட்டுக்கு யாராவது செய்து இருப்பார்கள் என்பது புரிகிறது. ஆனால் அந்த நிமிடத்தில் வந்த பயம் நிச்சயம் மறக்க முடியாதது. அதை செய்தது யார் என்று இன்னமும் தெரியவில்லை. இனிமேலாவது சொல்கிறார்களா பார்ப்போம்'' என்றார் டாக்டர் மாயா.