ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமாக்காரர்கள் இதுவரை மூத்தவர்களை பெரியவர்களை பெண்களை படங்களில் கேலி பேசி அவமதித்து வந்தார்கள். இப்போது தமிழ் மொழியையும்கூட அவமதிக்கும் அளவுக்கு தைரியம் பெற்று விட்டார்கள். மாமல்லபுரத்தில் நடந்த புலி ஆடியோ விழாவில் இமான் அண்ணாச்சி சொல்லுங்கண்ணே சொல்லுங்கண்ணே போல ஒரு சிறு நிகழ்ச்சி நடத்தினார்.
விழாவுக்கு வந்தவர்களிடம் சில இளைஞர்களை (!) கூப்பிட்டார். அவர்கள் இவரது ஏற்பாட்டில் வந்தவர்களா யதேச்சையாக இயல்பாக வந்தவர்களா தெரியவில்லை. அவர்களுடன் பேசிவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்தை பாடச் சொன்னார். அனைவருமே தப்பு தப்பாய் தாறுமாறாய் கேலியாய் பாடினார்கள். ஒருவர் மட்டும் ஓரளவு சரியாகக் கூறினார். ஒருவர் தமிழ்த்தாய் வாழ்த்தைக் கேட்டால் ஜனகனமன பாடினார். இதை எல்லாம் கண்ட பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் இயல்பாக வந்த இளைஞர்கள் என்றால் இவ்வளவு அறிவாளியாக விஜய் ரசிகர்கள் இருக்கிறார்களே என்று சொல்லலாம். செட் அப் என்றால் இமான் அண்ணாச்சிக்கு கேலிபேச வேறு தலைப்பே கிடைக்க வில்லையா?
தமிழ்த்தாய் வாழ்த்தைக் கிண்டல் செய்து அவமதித்தது கண்டிக்கத்தக்கது. இவை எல்லாம் வைரமுத்து பார்வையில் கண்பட நடந்தது இன்னொரு கொடுமை. இதைப்பார்க்கும் போது இன்றைய ரசிகர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்பதா? இன்றைய இளைஞர்கள் எல்லாரும் கத்துக்குட்டிகள் என்பதா? ஐயோ! ஐயோ!!