ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இனிது இனிது படத்தின் மூலம் அறிமுகமான ரேஷ்மி மேனன் தற்போது உறுமீன், நட்பதிகாரம், கிருமி படங்களில் நடித்து வருகிறார். ரேஷ்மி மேனனும், பாபி சிம்ஹாவும் தீவிரமாக காதலித்து வருவதுதான் லேட்டஸ்ட் லவ் டாபிக்.
இதுபற்றி ரேஷ்மி மேனன் கூறியதாவது: நான் காதலிக்கிறேனா இல்லையா என்பது அவ்வளவு முக்கியமான செய்தியா என்ன? எதுவாக இருந்தாலும் நான் இப்போது அது பற்றி எதுவும் பேச முடியாது. நான் எது சொன்னாலும் அது வேறுவிதமாக பார்க்கப்படும். இப்போது என் கவனம் நான் நடிக்கும் படங்களின் மீது தான் இருக்கிறது. கிருமி, நட்பதிகாரம், உறுமீன் படங்கள்தான் என் கேரியரை தீர்மானிக்கப்போகிறது. அதில்தான் கவனமாக இருக்கிறேன்.
மற்றபடி காதல் என்பது எனது பர்ஷனல் விஷயம். நான் எளிய குடும்பத்தைச் சேர்ந்த எளிய பெண். காதலுக்கு நானோ எனது குடும்பமோ எதிரி அல்ல. அது வரும்போது வரும், நடக்கும்போது நடக்கும். அதைபற்றி இப்போது நான் யோசிக்கவில்லை. சினிமாவில் சாதிக்க நிறைய விஷயம் இருக்கிறது என்கிறார் ரேஷ்மி மேனன்.
எந்த இடத்திலும் நான் பாபி சிம்ஹாவை காதலிக்கவில்லை. அது பொய்யான செய்தி என்று அவர் குறிப்பிடவில்லை.