இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இந்தியத் திரையுலகில் ராஜமௌலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் எழுதிய இரண்டு கதைகளான 'பாகுபலி, பஜ்ரங்கி பைஜான்' ஆகிய படங்கள் மூலம் 1000 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் நிகழ்ந்துள்ளது. ஒரு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் கதைதான் என்பதை விஜயேந்திர பிரசாத் நிரூபித்துள்ளார். 'பஜ்ரங்கி பைஜான்' கதையை அவர் ரஜினிகாந்துக்கும் சொன்னதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு புதிய கதையை ரஜினியிடம் சொல்லியிருக்கிறாராம்.
சமீபத்தில் ஒரு விழாவில் ரஜினிகாந்தும், விஜயேந்திர பிரசாத்தும் சந்தித்துப் பேசியுள்ளார்கள். அப்போது விஜயேந்திர பிரசாத் அரசியல் பின்னணி கொண்ட ஒரு வித்தியாசமான கதையை ரஜினியிடம் சொல்லியிருக்கிறார். கதையை ஆர்வத்துடன் கேட்ட ரஜினிகாந்த், கதை நன்றாக இருப்பதாக சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் படத்தை விஜயேந்திர பிரசாத்தே இயக்க விரும்புவதாகவும் தெரிகிறது.
ரஜினி விரைவில் பா.ரஞ்சித் படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தையடுத்து ஷங்கர் இயக்க உள்ள 'எந்திரன் 2' படத்தில் நடிக்கப் போகிறார். இதற்கும் அடுத்து விஜயேந்திர பிரசாத் கதையில் ரஜினிகாந்த் 2016 கடைசியில் நடிக்கலாம் என்கிறார்கள்.