டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
திரைப்பட நடிகராக இருந்து சின்னத்திரை தொகுப்பாளர் ஆனவர் ரிஷி. டீலா நோ டீலா, கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி போன்ற கேம் ஷோக்களை தொகுத்து வழங்கி புகழ்பெற்றார். தற்போது சூப்பர் சேலன்ஞ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த ரிஷியை சமீபமாக சினிமாவில் பார்க்க முடியவில்லை.
இதுகுறித்து அவர் கூறியதாவது: பெரிய பெரிய சினிமா நட்சத்திரங்கள் தொகுத்து வழங்க வேண்டிய நிகழ்ச்சியை என்னை நம்பி ஒப்படைத்தார்கள். எந்த முன் அனுபவமும் இல்லாமல் அந்த நிகழ்ச்சிகளை நடத்தினேன். இப்போது சின்னத்திரை கலைஞர்கள் பங்குபெறும் சூப்பர் சேலன்ஞ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறேன். இது பரிசுக்கான போட்டி நிகழ்ச்சியல்ல. ஜாலியான கலாட்டா நிகழ்ச்சி, 10 எபிசோட்கள்தான் பிளான் பண்ணியிருந்தோம். நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் எபிசோட்களை அதிகப்படுத்தியிருக்கிறோம்.
நேரம் கிடைக்கும் போது நாடங்களில் நடிக்கிறேன். இது என் திறமையை வளர்த்துக் கொள்ள உதவுகிறது. சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வருகிறது. எல்லாமே சப்போர்ட்டிங் கேரக்டராக இருப்பதால் ஒப்புக் கொள்ளவில்லை. ரகுவரன் மாதிரி வில்லன் கேரக்டர்களில் நடிக்க ஆசை. அதற்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். என்கிறார் ரிஷி.