பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வரிவிலக்கு கேட்டு விண்ணப்பிக்கும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு உண்டா? இல்லையா என்கிற முடிவை படம் பார்த்த ஒரு வாரத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தான் தயாரித்த ஏழாம் அறிவு படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு அளிக்க மறுத்துவிட்டதை எதிர்த்து தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் விரிவான விளக்க அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன் பின்னர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விபரம் வருமாறு: தயாரிப்பாளர் வரிவிலக்கு கேட்டு விண்ணப்பித்த 2 வாரத்திற்குள் வரிவிலக்கு குழு படத்தை பார்க்க ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒப்புதல் கிடைத்த தேதியிலிருந்து 2 வாரத்துக்குள் தயாரிப்பாளர் வரிவிலக்கு குழுவிற்கு படத்தை திரையிட்டுக் காட்ட வேண்டும். வரிவிலக்கு குழுவினர் படம் பார்த்த பிறகு ஒரு வாரத்துக்குள் தனது முடிவை அறிவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.