ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராஜமௌலியின் இயக்கத்தில் கடந்த மாதம் 10ம் தேதி வெளிவந்த 'பாகுபலி' படம் வெற்றிகரமாக 25வது நாளைக் கடந்திருக்கிறது. படம் வெளியான நாளில் இருந்து இன்று வரை பலரும் படத்தைப் பார்த்துப் பாராட்டி வருகிறார்கள். தென்னிந்தியத் திரையுலகத்தில் மட்டுமல்லாது, ஹிந்தித் திரையுலகத்திலும் இந்தப் படம் பாராட்டுக்களையும் வசூலையும் அள்ளி வருகிறது. சமீபத்தில் 'பாகுபலி' படத்தைப் பார்த்துள்ள ஹிந்தித் திரையுலகின் முன்னணி நாயகனான ஷாரூக்கான் படம் பற்றி மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
“பாகுபலி' எவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கப்பட்டுள்ள படம். இந்தப் படத்தில் சம்பந்தப்பட்டுள்ள அனைவருமே ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். நீங்கள் பாயத் தயாராக இருந்தால் நீங்கள் மட்டுமே வானத்தைத் தொடுவீர்கள்” என தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். ஷாரூக் கான் பாராட்டிற்கு படக் குழுவினர் பலரும் நன்றி தெரிவித்துள்ளனர்.
'பாகுபலி' படம் வெளிவந்த இந்த மூன்று வாரங்களில் உலகம் முழுவதும் இதுவரை சுமார் 470 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வார கடைசிக்குள் அது 500 கோடி ரூபாயைத் தாண்டி விடும் என்கிறார்கள். தமிழில் மட்டும் சுமார் 60 கோடி ரூபாய் வரை படம் வசூலித்துள்ளதாம்.