இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் பாயும்புலி. விஷால்-காஜல்அகர்வால் ஜோடி சேர்ந்துள்ள இப்படத்தை சுசீந்திரன் இயக்க, டி.இமான் இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல்கள் எழுதியிருக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். விழா தொடங்குவதற்கு முன்பு மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் திருஉருவப்படம் திறந்து வைக்கப்பட்டு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதையடுத்து விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு அப்துல்கலாம் எழுதிய அக்னி சிறகுகள் புத்தகம் வழங்கப்பட்டது. பின்னர் வைரமுத்து ஒரு கவிதை பாடினார். அதன்பிறகு ஆடியோ விழா தொடங்கியது. இவ்விழாவில், இயக்குனர் சுசீந்திரனுக்கு சிறந்த தயாரிப்பாளரின் இயக்குனர் என்கிற விருது வழங்கப்பட்டது. காரணம், பாயும் புலி படத்தை 80 நாட்களில் முடிக்க திட்டமிட்டிருந்த அவர், அதற்கு முன்னதாகவே படத்தை சிக்கனமாக முடித்து விட்டாராம். அதற்காக அவரை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.
பின்னர் விழாவில் வைரமுத்து பேசுகையில், இந்த படத்திற்கு சிறப்பான பாடல்களை கொடுத்துள்ளேன். இந்த படத்தை நான் பார்த்து விட்டேன். ரொம்ப சிறப்பாக வந்துள்ளது. மேலும், இந்த படத்தின் நாயகன் விஷால் இப்போதே பெரிய அளவில் வளர்ந்து நிற்கிறார். ஆனால் இந்த படத்தின் ரிலீசுக்குப்பிறகு அவர் இன்னும் ரொம்ப உயரத்துக்கு சென்று விடுவார்.