அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
கெளதம் மேனன் இயக்கிய நீதானே என் பொன்வசந்தம் படத்தில் சமந்தாவின் தோழியாக அறிமுகமானவர் வித்யுலேகா. அதையடுத்து, தீயா வேலை செய்யணும் குமாரு, மாலினி 22 பாளையங்கோட்டை, ஜில்லா, வீரம், காக்கி சட்டை, மாஸ் என பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தார் அவர்.
ஆனால் சந்தானம் நடித்த இனிமே இப்படித்தான் படத்தில் அவருக்கு மனைவியாக ஒரேயொரு காட்சியில்தான் நடித்திருந்தார். அதுவும், தன்னை வெறுக்கும் கணவனை, உன் காதலியை நெனச்சிக்கிட்டாவது என்னை ஒரேயொரு முறை கட்டிப்பிடிச்சுக்கோ மாமா -என்று சொல்லி சந்தானத்தின் மனசை தொடும் வகையில் நடித்திருந்தார் வித்யுலேகா. அந்த காட்சியே அந்த படத்தின் ஹைலைட்டாக அமைந்தது.
ஆக, அதற்கு முன்பு எத்தனையோ படங்களில் காமெடி ரோல்களில் நடித்த வித்யுலேகாவிற்கு அந்த ஒரு காட்சி பெரிய பெயரை வாங்கிக்கொடுத்தது. இப்போது விஎஸ்ஓபி, புலி, மாப்ள சிங்கம் என பல படங்களில் அவர் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படங்களில் வித்யுலேகாவுக்கு காமெடி கேரக்டர்கள்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. என்றபோதும், அந்த படங்களின் டைரக்டர்களிடம் முழுக்க முழுக்க என்னை சிரிக்க மட்டுமே வைக்காமல் இனிமே இப்படித்தான் படத்தில் நடித்தது மாதிரி ஓரிரு காட்சிகளிலாவது மனசை டச் பண்ணும் வகையில் நடிக்க வையுங்கள் என்ற கேட்டுக்கொண்டு வருகிறாராம். அதோடு, எதிர்காலத்தில் படிப்படியாக காமெடியில் இருந்து குணசித்ர நடிகையாகி விட வேண்டும் என்பதும் வித்யுலேகாவின் ஆசையாகியிருக்கிறதாம்.