'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஷால், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்க சுசீந்திரன் இயக்கியுள்ள 'பாயும் புலி' படத்தின் இசை வெளியீடு ஆக., 2ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் திரைப்பட பிரமுகர்கள் உட்பல விஷாலின் நெருங்கிய வட்டத்தில் உள்ள நண்பர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். ஆனால், இந்த விஷாவுக்கு ஆர்யாவை வரவேண்டாமென விஷால் கூறியிருக்கிறார்.
இதற்கு முன் விஷால் நடித்து வெளிவந்த 'ஆம்பள' படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது பொங்கலுக்கு பெரிய படங்களுக்கு மத்தியில் 'ஆம்பள' வருவது பற்றி விஷாலிடம் கேட்ட போது 'எவனா இருந்தாலும் வெட்டுவேன்' என விஷால் கூறியதாக ஆர்யா மேடையில் பேசினார். அது தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதை மனதில் வைத்துத்தான் விஷால் தற்போது ஆர்யாவை வரவேண்டாமென சொல்லியிருக்கிறார். “ஆர்யா தயவு செய்து 'பாயும் புலி' இசை வெளியீட்டிற்கு வந்துவிடாதே. போன முறை நீ தேவையற்ற பரபரப்பை ஏற்படுத்திவிட்டாய். அதனால் இந்த முறை வராதே” என டிவிட்டரில் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதற்கு ஆர்யா பதிலளிக்கையில், “இந்த முறை நான் கண்டிப்பாக சிறப்பாக பேசுவேன், அம்மா சத்தியமாக நம்பு மச்சான்,” எனத் தெரிவித்துள்ளார்.