தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கருப்பசாமி குத்தகைதாரர் மீனாட்சியை அத்தனை எளிதில் ரசிகர்கள் மறந்து விட மாட்டார்கள். காரணம், அந்த படத்தில் அவர் கிராமத்து பெண் கெட்டப்பில் அசத்தலாக நடித்திருந்தார். அதனால் தமிழ் சினிமாவில் அவருக்கு ஒரு மிகப்பெரிய இடம் காத்திருப்பதாகத்தான் சினிமாக்காரர்களே கருதினர்.
அதற்கேற்ப அதன்பிறகு பெருமாள், ராஜாதிராஜா, தோரணை, மந்திர புன்னகை, அகம்புறம் என பல படங்களில் நடித்தார் மீனாட்சி. ஆனால் அவரால் மார்க்கெட்டில் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை. அதையடுத்து சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் துப்பாக்கி, வெள்ளக்கார துரை படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்த மீனாட்சி, தற்போது திருநாள், வில்லங்கம் படங்களிலும் கேரக்டர் ரோல்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், மும்பையில் இருந்து கொண்டே, சில சினிமா மேனேஜர்களுக்கு போன் செய்து படவேட்டை நடத்தி வரும் மீனாட்சி, முன்பெல்லாம் பிரபல ஹீரோக்களின் படங்களில் மட்டும் கிளாமராக நடிப்பதற்கு ஓகே சொல்லி வந்தவர், இப்போது புதுவரவு நடிகர்களின் படங்களிலும் கிளாமராக நடிப்பதற்கு தான் தயாராக இருப்பதாக கூறி வருகிறார். இதனால் அடுத்தபடியாக மீனாட்சிக்கு மேலும் சில படங்கள் கிடைப்பதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.