பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கொம்பன் படத்தை தொடர்ந்து தோஸ்த், காஷ்மோரா, கோமாளி ஆகிய படங்களில் நடிக்கிறார் கார்த்தி. இதில் கோகுல் இயக்கும் காஷ்மோரா படத்தின் தலைப்பு மாற்றப்பட உள்ளது. கோமாளி படத்தை மணிரத்னம் இயக்குகிறார். ஓ காதல் கண்மணியே படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் இயக்கும் இந்த படமும் ரொமான்டிக் லவ் சப்ஜெக்டில் உருவாகிறது.
இதுவரை ரொமான்ஸ் காதல் கதைகளில் நடித்தபோதும் அடிதடி என்று அதிரடி கதைகளாக நடித்து வந்த கார்த்தி, இந்த படத்திற்காக மென்மையான கதாபாத்திரத்தை ஏற்கிறார். அதோடு காமெடி கலந்த கோமாளி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் நடிப்பதற்கு பல நடிகைகள் ஆடிசனுக்கு சென்று வந்தனர். அதில் ரஜினிமுருகன் படநாயகி கீர்த்தி சுரேசும் ஒருவர். ஆனால் அவருக்கு உடனடியாக எந்த பதிலும் சொல்லாமல் அப்புறம் சொல்கிறேன் என்று அனுப்பிவிட்டாராம் மணிரத்னம். அதனால் அந்த படம் தனக்கு கிடைக்கும் என்று அவர் பெரிதாக எதிர்பார்க்கவில்லையாம்.
ஆனால் சமீபத்தில் ஒருநாள் மணிரத்னம் அலுவலகத்தில் இருந்து அவர் கோமாளி படத்துக்கு ஹீரோயினாக செலக்ட் ஆகியிருப்பதாக தகவல் வந்ததாம். இதனால் செம குஷியாகி விட்டாராம் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம், ரஜினிமுருகன், பாம்பு சட்டை, மசாலாப்படம், பிரபுசாலமன் படங்களைத் தொடர்ந்து மணிரத்னம் படமும் கீர்த்தி சுரேஷின் டைரியில் இடம்பெற்று விட்டது. அதனால் நடித்து வரும் படங்கள் திரைக்கு வரும்போது கோலிவுட்டில் தனக்கு முன்னணி ஹீரோயின் அந்தஸ்து கிடைத்து விடும் என்று சந்தோசத்தில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.