ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'கஜினி' படத்தின் மூலம் இந்தியத் திரையுலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன் பின் அவருடைய இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களும் ஆர்வத்துடன் இருந்தனர். அவர்களில் விஜய்க்குத்தான் முருகதாஸ் இயக்கத்தில் தொடர்ந்து 'துப்பாக்கி, கத்தி' ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகரான ஆமீர் கானே வியந்து பார்க்கும் ஒரு இயக்குனராக முருகதாஸ் இருக்கிறார். இயக்குனர் ஷங்கருக்குக் கூட கிடைக்காத வெற்றி முருகதாஸுக்கு ஹிந்தித் திரையுலகிலும் கிடைத்தது.
தற்போது சோனாக்ஷி சின்ஹா நடிக்கும் 'அகிரா' என்ற ஹிந்திப் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை இயக்கி முடித்ததும் மீண்டும் தமிழில் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். அந்தப் படத்தில் நடிக்க விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி தமிழ் நட்சத்திரங்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர். அதே சமயம் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நாயகனான மகேஷ் பாபு, முருகதாஸ் இயக்கத்தில் நாயகனாக அந்தப் படத்தில் நடிக்கப் போகிறார் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராக உள்ள இந்தப்படம் முற்றிலும் ஒரு ஆக்ஷன் படமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். தமிழ் ஹீரோக்கள் நடித்தால் தெலுங்கில் எப்படி வரவேற்பு இருக்கும் என்று தெரியாது. விஜய்க்கும், சூர்யாவுக்கும் தெலுங்கு பேசத் தெரியாது. ஆனால், சென்னையில் பிறந்து வளர்ந்து படித்த மகேஷ் பாபு தமிழ், தெலுங்கு இரு மொழிகளையும் சரளமாகப் பேசுவார். அதனால்தான், முருகதாஸ் படத்தில் அவர் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என்ற பேச்சு பலமாக உள்ளது.