ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
300 படங்களுக்கு மேல் நடனம் அமைத்தவர் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர். குத்துப்பாட்டு நடனங்களுக்கு ஸ்பெஷலிஸ்ட். சில நேரங்களில் அவரே ஆடி கலக்குவார். ஸ்ரீதர் தற்போது போக்கிரி மன்னன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகியிருக்கிறார். ஸ்பூர்த்தி என்ற புதுமுகம் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். சிங்கம்புலி, மயில்சாமி, முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ரமேஷ் ரெட்டி தயாரித்து, வில்லனாக நடித்துள்ளார். சினிடெக் சூரி ஒளிப்பதிவு செய்துள்ளார், இந்திரவர்மன் இசை அமைத்துள்ளார், ராகவ் மகேஷ் இயக்கி உள்ளார்.
ஹீரோவாக நடிப்பது பற்றி ஸ்ரீதர் கூறியதாவது: எங்க அப்பா மணி ஒரு நாடக நடிகர். அவர் நடிக்கிற நாடகங்களில் என்னை நடிக்க ஆட வைப்பார். அப்போதிருந்து ஆடி வருகிறேன். இதுவரை 300 பாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கிறேன். அதில் 50 பாடல்களுக்கு நானே ஆடியிருக்கிறேன். நடிக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு எப்போதும் இருந்ததில்லை. இதற்காக நான் முயற்சியும் எடுக்கவில்லை.
இந்தப் படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் நடன அமைக்க கேட்டுத்தான் என்னிடம் வந்தார்கள். புதுமுக ஹீரோ தேடுவதாக சொன்னார்கள். நானும் நடனம் இயக்கி தருவதாக ஒப்புக் கொண்டேன். திடீரென்று நீங்களே ஹீரோவாக நடியுங்கள். முரட்டுத் தனமாக வில்லேஜ் கேரக்டர். சரியா இருப்பீர்கள் என்றார்கள். கதையை கேட்டதும் நடிக்க ஆசை வந்து விட்டது ஒப்புக் கொண்டு நடித்தேன். தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் இல்லை படம் இயக்கத்தான் ஆர்வமாக இருக்கிறேன். நிறைய கதைகள் வைத்திருக்கிறேன். அவற்றை இயக்குவேன். இந்தப் படத்தில் மக்கள் என்னையும் ஹீரோவாக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். அப்படி நடந்தால் தொடர்ந்து நடிப்பது பற்றி யோசிப்பேன் என்றார்.