ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
கமல்ஹாசன், மோகன்லால் சிறந்த நடிகர்கள். அவர்களுடன் என்னை ஒப்பிடாதீர்கள் என்று பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கூறியுள்ளார்.
பாலிவுட் திரையுலகில், பன்முகத்திறமை கொண்ட நடிகராக வலம் வருபவர் அஜய் தேவ்கன். ஆக்ஷன், எண்டர்டெய்னர் படங்கள் என கலக்கி வந்த அஜய் தேவ்கன், முதல்முறையாக "த்ரிஷ்யம் " சீரியஸ் கதை கொண்ட படத்தில் நடித்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் வெளியாகியுள்ள இப்படம், வசூலை குவித்துள்ள நிலையில், பாலிவுட்டிலும் வசூல் சாதனை நிகழ்த்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். த்ரிஷ்யம் படத்தின் படப்பிடிப்பின் போது, தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து அஜய் தேவ்கன் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.....
இது ரீமேக் படம். ஏன் இதில் நடிக்க ஒப்புக்கொண்டீர்கள்?
த்ரிஷ்யம் படம், மலையாள படத்தின் ரீமேக் தான். ஆனால், இது சாதாரண படத்தின் ரீமேக் அல்ல. மலையாள படத்தை, நானும், நிஷிகாந்தும் பார்த்தபோது ஒன்றை உணர்ந்தோம். இந்த படம் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கானது மட்டுமல்ல..ஒட்டுமொத்த உலகத்திற்கானது. அதன்காரணமாகவே, இந்த படத்தை ரீமேக் செய்ய நிஷிகாந்த் ஒப்புக்கொண்டார். இந்த படம், தமிழ், மலையாள திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. த்ரிஷ்யம் படத்தில் நடித்ததை, எனது திரைவாழ்க்கையில் மிக முக்கிய படம் என்றே கூறுவேன்.
ஒரிஜினலுக்கும் தங்கள் படத்திற்கு வித்தியாசம் இருக்கிறதா?
இந்த படத்தின் படப்பிடிப்பின் போதே, இயக்குநர் நிஷிகாந்த் காமத்திடம், இந்த படம், ஒரிஜினலில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது என கேட்டேன். அவர் அதற்கு ஒரே வார்த்தை தான் சொன்னார். படம் ஒரிஜினலை விட சிறப்பாக வந்துள்ளது என்று கூறினார்.
இந்த படத்தில் கமல்ஹாசனும், மோகன்லாலும் நடித்திருந்ததை பார்த்தீர்களா?
த்ரிஷ்யம் மலையாளத்தில் மோகன்லாலும், அதன் தமிழ் வெர்சனான பாபநாசம் படத்தில் கமல்ஹாசனும் நடித்துள்ளது தெரியும். ஆனால், நான் அந்த இரண்டு படங்களையும் பார்க்கவில்லை, ஏனெனில், அவர்களின் தாக்கம் எனக்குள் வந்துரக்கூடாது என்பதற்காக....
உங்களை கமல், மோகன்லாலுடன் இனி ஒப்பிடலாமா?
உண்மையை சொல்கிறேன்.....கமல்ஹாசன் மற்றும் மோகன்லால் அவர்கள் சிறந்த நடிகர்கள். அவர்களுடன் என்னை ஒப்பிடுவதே தவறு.
இப்படத்தில் உங்களது கேரக்டர் குறித்து...
இந்த படத்தில் நான் கேபிள் ஆபரேட்டர் ரோலில் நடித்துள்ளேன். தன் குடும்பத்தை, போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிக்க வைக்கும் பொருட்டு, துரிதமாகவும், அதேநேரமும் சமயோசிதமாக செயல்படுவேன். படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பி பார்ப்பேன். படம் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் வரும் சம்பவங்களை நினைவுபடுத்தி, பல இடங்களில் புத்திக்கூர்மையாக செயல்படுவேன்.
உங்களது புதிய கேரக்டர் ரசிகர்களிடம் எடுபடுமா?
த்ரிஷ்யம் படத்தில் எனது கேரக்டர், ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இந்த படமும் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். சீரியஸ் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்காது என்ற வழக்கத்தை, இந்த படம் மாற்றி அமைக்கும். படத்தி்ன் துவக்க காடசியிலிருந்தே, படம் பார்ப்பவர்களை தன்வசம் படம் ஈர்த்துக்கொள்ளும். அவ்வளவு அருமையான படம்.
போலிஸ் கேரக்டருக்கு தபுவை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?
போலீஸ் கேரக்டருக்கு, நடிகை தபுவை யார் தேர்ந்தெடுத்தார்கள் என்பது தெரியவில்லை. நான் அந்த கேரக்டருக்கு அவர் மிகச்சிறப்பாக பொருந்தியிருந்தார். படமே, என்னையும், அவர்களை சுற்றியும் படம் நகரும். தபு அந்த கேரக்டரை சிறப்பாக செய்திருந்தார். தபு, எனது குழந்தை பருவத்திலிருந்தே சிறந்த நண்பராக இருப்பவர்.
ஸ்ரேயா சரண் குறித்து...
த்ரிஷ்யம் படத்தில், ஸ்ரேயா சரண் எனது மனைவி கேரக்டரில் நடித்துள்ளார். திரையுலகின் மிகப்பெரிய நடிகை ஸ்ரேயா சரண் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். இந்த படத்தில், அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. தனக்கு கொடுத்த வேலையை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார். ஸ்ரேயா சரண் சிறந்த அழகியும் கூட....என்று அஜய் தேவ்கன் கூறினார்.