தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திறமை இருந்தால் 60 வயதிலும் சினிமாவில் சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர் பரவை முனியம்மா. கோவில் திருவிழாக்களில் நாட்டுப்புற பாடல்களை பாடிக்கொண்டிருந்தவரை தூள் படத்தில் அறிமுகப்படுத்தினார் தரணி. "ஏய் சிங்கம்போல நடந்து வாரான் செல்லப் பேராண்டி..." என்ற பாடலோடு அறிமுகமாகி 73 படங்களில் பாடிவிட்டும், நடித்து விட்டும் இன்று பரவை கிராமத்தில் உள்ள சிறிய வீட்டுக்குள் முடங்கிவிட்டார்
பத்து மாதத்திற்கு முன்பு கணவர் இறந்து விட்டார். சமீபத்தில் மருமகள் இரண்டு குழந்தையை தவிக்கவிட்டு இறந்து விட்டார். மகனுக்கு மனநிலை சரியில்லை. மூன்று பேரையும் தள்ளாத வயதில் கவனிக்க வேண்டிய பொறுப்பு பரவை முனியம்மாவுக்கு. தற்போது அவரால், பாடவும் ஆடவும் முடியாததால் ரேஷன் அரசி வாங்கி காலத்தை தள்ளுகிறார். சம்பாதித்தபோது கட்டிய வீட்டை இரண்டாக பிரித்து முன்பகுதியை வாடகைக்கு விட்டு அந்த வருமானத்தில் கஷ்ட ஜீவனம் நடத்துகிறார்.
பரவை முனியம்மாவின் இறுதிக் காலம் இத்தனை வறுமையாகி போனது திரையுலகினருக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் பீக்கில் இருந்த காலத்தில் அவர் சம்பாதித்த பணம் எங்கே போனது என்ற கேள்விக்கு பரவை முனியம்மாவுக்கே விடை தெரியவில்லை. "யாரையும் குறை சொல்லவிரும்பல எல்லாம் என் தலைவிதி" என்று மட்டும் சொல்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட பரவை முனியம்மா மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலையை அறிந்த தனுஷ் அவருக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்து உதவ முன்வந்திருக்கிறார். விஷால் அவரது மருத்துவ செலவை ஏற்க முன்வந்திருக்கிறார். இதேப்போல் சிவகார்த்திகேயனும் உதவி வருகிறார்.