ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இங்கே தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக இயக்குனருக்கும் பிரபல ஹீரோவுக்கும் செட்டாகி முதல் படமும் ஹிட்டாகி விட்டால் அந்த இயக்குனரின் அடுத்த படமும் அந்த ஹீரோவை வைத்து தான் இருக்கும்.. ஹீரோ வேண்டுமானால் அதற்குள் வேறு சிலரின் படங்களில் நடித்துவிட்டு வந்துவிடுவாரே தவிர, இயக்குனர் அவருக்காக காத்திருந்து இரண்டாவது படத்தை பண்ணுவார்.. புலன் விசாரணை-கேப்டன் பிரபாகரன் தந்த ஆர்.கே.செல்வமணி-விஜயகாந்த், தில், தூள் தந்த தரணி-விக்ரம், பொல்லாதவன், ஆடுகளம் தந்த வெற்றிமாறன்-சிம்பு, இப்போது சூதுகவ்வும் படத்தை தொடர்ந்து நலன் குமாரசாமி-விஜய்சேதுபதி என வெகு சில இயக்குனர்-நடிகர்கள் மட்டுமே தங்களது இரண்டாவது படத்திலும் கூட்டணியை தொடர்ந்துள்ளனர்.
நேரம், பிரேமம் படங்கள் மூலமாக மலையாளத்தில் அல்போன்ஸ் புத்ரன்-நிவின்பாலி இருவரும் இந்த ட்ரெண்டுக்குள் வந்திருக்கின்றனர்.. இப்போது அந்த லிஸ்டில் இடம் பிடிக்கப்போகிறது வினித் குமார்-பஹத் பாசில் கூட்டணி.. காரணம் இவர்களது காம்பினேஷனில் தற்போது உருவாகியுள்ள 'ஆயாள் ஞானல்ல' படம் தந்த உற்சாகம் தான்.. சமீபகாலமாக தோல்விப்படங்களாக தந்துவரும் பஹத் பாசில் இந்தப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிப்பதுடன் வினீத்குமாரின் மேக்கிங்கை பார்த்ததும் நிச்சயம் இந்தப்படம் தனக்கு மறுவாழ்வு தரும் என்பதை புரிந்துகொண்டார்.
அதனால் தான் இந்தப்படம் நடந்துகொண்டிருக்கும்போதே வினீத் குமாரிடம், “உங்களது அடுத்த படமும் என்னை ஹீரோவாக வைத்தே பண்ணுவீர்களா” என கோரிக்கை வைத்துள்ளார். இதற்குமுன் பஹத் பாசிலே இப்படி வழிய போய் அவரது அடுத்த படத்திலும் வாய்ப்பு கேட்டது தன்னை முற்றிலும் வேறொரு கோணத்தில் வெளிப்படுத்தி சூப்பர்ஹிட் படம் தந்த இயக்குனர் ராஜீவ் ரவியிடம் மட்டும்.. அதன் பின் இப்போது வினீத்குமாரிடம் தான் இப்படி கோரிக்கை வைத்துள்ளார். இதுவரை 32 படங்களில் நடித்துள்ள பஹத் பாசில் இதற்கு முன் இயக்குனர் லால் ஜோஸ் இயக்கத்தில் மட்டுமே கொஞ்சம் இடைவெளிவிட்டு இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.