சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
இயக்குனர்கள் நடிகர்களாக மாறும் சீசன் மலையாள சினிமாவிலும் தலையெடுக்க துவங்கியுள்ளது. அப்படித்தானே 'ஷட்டர்' என்கிற அருமையான படத்தை கொடுத்த இயக்குனர் ஜாய் மேத்யூவை, அடுத்து படம் இயக்கவிடாமல் பிசியான குணச்சித்திர நடிகராக மாற்றிவைத்து விட்டார்கள்.. அதேபோல பீக்கில் இருக்கும் இயக்குனர் ரஞ்சித்தையும் சில படங்களில் தலைகாட்ட வைத்தார்கள்.. ஆனாலும் உஷாராக அவர் இப்போது டைரக்சனில் மட்டுமே கவனமாக இருக்கிறார்.. இந்த சூழலில் தற்போது பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்துவரும் 'அனார்கலி' படத்தில் மொத்தம் ஐந்து இயக்குனர்கள் நடிக்க இருக்கிறார்கள். இதுநாள் வரை கதாசிரியராக வலம் வந்த சாச்சி, இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறார்.
இந்தப்படத்தில் கடற்படை அதிகாரிகள் மற்றும் சில கதாபாத்திரங்களில் நடிக்க புதுமுகங்களாக ஐந்துபேர் வேண்டும் என தேடிய இயக்குனர் சாச்சி, கடைசியில் ஐந்து இயக்குனர்களை இழுத்துவந்து நடிக்க வைத்திருக்கிறார். பிருத்விராஜ் நடித்த 'இவிடே' படத்தை இயக்கிய ஷியாம் பிரசாத், மற்றும் வி.கே.பிரகாஷ், மதுபால் ஆகிய மூவரையும் இதற்கு முன்னரே நடித்து வரும் இயக்குனர்களான ரஞ்சி பணிக்கர் மற்றும் மேஜர் ரவி ஆகிய ஐவரையும் இந்தப்படத்தில் நடிக்க வைத்துள்ளார். இவர்களுடன் பிஜுமேனன் மற்றும் கதாநாயகியாக மியா ஆகியோரும் நடிக்கிறார்கள். இதில் பிருத்விராஜும் பிஜுமேனனும் கடற்படை அதிகாரிகளாக நடித்துள்ளார்கள்.