ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டின் ஸ்டைல் மன்னனாக துறுதுறு நாயகன் வேடங்களை ஏற்று நடித்து வந்த அல்லு அர்ஜுன், அதிக கோபம் கொண்டு சீறும் இளைஞனாக தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநர் பொய்யப்படி ஸ்ரீனு இயக்கும் படத்தில், அல்லு அர்ஜுன் இக்கதாபாத்திரத்தை ஏற்றுள்ளதாக கூறப்படுகின்றது. ரசிகர்கள் அறிந்திராத வகையில் கோபமாக தோன்றும் அல்லு அர்ஜுன் கண்டிப்பாக ரசிகர்களைக் கவருவார் என இயக்குநர் தெரிவித்துள்ளார். இத்தகவல் வெளிவந்தது முதல் ரசிகர்கள் அல்லு அர்ஜுன் ஏன் இவ்வளவு கோபம் கொள்கின்றார் அதற்காக படத்தில் வைக்கப்படும் காட்சிகள் எப்படி இருக்கும் என இப்பொழுதே தங்கள் யூகங்களை தெரிவிக்க துவங்கிவிட்டனர். இப்படத்தை தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கீதா ஆர்ட்ஸ் பேனர் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றார். இப்படத்தில் நடிகைகள் ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் கேத்ரின் தெரஸா ஆகியோர் நாயகிகளாக ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். ஜூலை 19 ஆம் தேதி துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.