‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பீட்சா படத்திற்கு பிறகு தமிழில் தனக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கும் என்றுதான் எதிர்பார்த்தார் ரம்யா நம்பீசன். ஆனால், அதன்பிறகு சில சின்ன படங்களில்தான் நடித்தார். அதில் சில வெற்றி பெறவில்லை. சில படங்கள் திரைக்கே வரவில்லை.
இந்த நிலையில்தான், தற்போது அருள்நிதிக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் என்ற படம் திரைக்கு வந்திருக்கிறது. இந்த படம் பெரிய ஹிட் இல்லை என்றபோதும், ஓரளவு ஓடிக்கொண்டிருக்கிறது. அதோடு, ரம்யா நம்பீசனின் கிராமத்து பெண் வேடம் பலரை கவர்ந்திருக்கிறது.
மாடர்ன் டிரஸ்ஸில் நடித்த கதாபாத்திரங்களை விட புடவை கெட்டப்பில் நடித்த இந்த கதாபாத்திரத்தில் உங்களது நடிப்பு பிரமாதமாக உள்ளது என்று சில கோலிவுட் இயக்குனர்களே ரம்யா நம்பீசனுக்கு போன் போட்டு கருத்து சொன்னார்களாம். அதோடு, ஒரு கிராமத்து படமும் அவருக்கு கிடைத்திருக்கிறதாம்.
இதனால் படம் எதிர்பார்த்தபடி ஓடாவிட்டாலும் தனது நடிப்பு ஒர்க் அவுட்டாகியிருக்கிறது என்று நினைக்கும் ரம்யா நம்பீசன், நான் யாரையும் தேடிச்செல்ல மாட்டேன். என்னைத்தேடி வரும் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று முன்பு வெட்டியாக பேசிக்கொண்டிருந்தவர் இப்போது அதை ஏறக்கட்டிவிட்டு, சில கிராமத்து டைரக்டர்களை தொடர்பு கொண்டு சான்ஸ் கேட்டு வருகிறார்.