பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
'புலி' படத்தில் இளவரசி கேரக்டரில் ஹன்சிகா நடிக்கிறார் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். ஆனால், இந்த கேரக்டரில் நடித்து முடிப்பதற்குள், படாதபாடு பட்டு விட்டாராம் அவர். தினமும், 'மேக் அப்'பிற்காக மட்டும், மூன்று மணி நேரம் அவருக்கு செலவானதாம். இது, மட்டுமல்லாமல், பட்டு புடவை, கிலோ கணக்கில் தங்க நகைகள் ஆகியவற்றையும் அணிந்து நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், ரொம்பவே சிரமப்பட்டுள்ளார் ஹன்சிகா. இதுகுறித்து, அவர் கூறுகையில், 'என் திரையுலக வாழ்க்கையில், இதுபோன்ற கேரக்டர் இனி எனக்கு கிடைக்குமா என்பது சந்தேகம் தான். நான் பட்ட கஷ்டங்கள் அனைத்திற்கும், படம் வெளியானதும் பலன் கிடைத்து விடும்' என, கூறியுள்ளார்.