'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு நாடே கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறது. அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில், தற்போது அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பேர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வியாழன் அன்று அவரது இறுதி சடங்குகள் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது: அப்துல் கலாம் மறைவு குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், மாணவ சமுதாயத்தை அனைத்து நிலைகளிலும் ஊக்கப்படுத்தியவர். . அவரது ஆத்மா சாந்தியடையட்டும் உச்சநிலைக்கு சென்ற போதும் பணிவு, எளிமையாக வாழ்ந்தவர். மக்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்தவர். மகாத்மா காந்தி, காமராஜர், பாரதியாரை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால், கலாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது பாக்கியம் என கூறியுள்ளார்.