டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
“இவன் பதவியே அப்பவோ இப்பவோன்னு ஆடிக்கிட்டு இருக்காம்.. இதுல எனக்கு இவன் அமைச்சர் பதவி வாங்கி தரானாம்” என அமைதிப்படை படத்தில் மணிவண்ணன் கிண்டலாக ஒரு வசனம் எழுதியிருப்பார். தற்போது சல்மான்கான் நிலை அப்படித்தான் மாறி வருகிறது.. இவரே ஆள் ஒருவரை கார் ஏற்றிக்கொன்ற வழக்கில் கைதாகி, சிறையில் இருந்து இப்போதுதான் ஒரு வழியாக ஜாமீனில் வெளியே வந்து உலாவுகிறார்.. சூழ்நிலை அறிந்து பேசாமல் அமைதியாக இருக்கவேண்டாமா..? மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனைக்குள்ளான யாகூ மேனனுக்கு ஆதரவாக இவர் ட்வீட்டரில் கருத்து சொல்லியிருக்கிறார்.
இதனால் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவரான பிரவீன் தொகாடியாவின் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறார்.. “நீதிமன்றமே விசாரித்து தண்டனை கொடுத்த குற்றவாளிக்கு ஆதரவாக பேசும் சல்மான்கான் போன்றவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று, தீவிரவாதிகளுக்கு இடையில் வசித்தால் தான் சந்தோஷமாக இருப்பார்கள் போல. சல்மான்கானின் பெற்றோர் 1947ல் அப்போதே பாகிஸ்தானுக்கு போகாமல் தவறு செய்துவிட்டனர். இப்போது அந்த தவறை திருத்திக்கொள்ளும் வாய்ப்பாக சல்மான்கான் பாகிஸ்தானுக்கு சென்று வசிக்கட்டும்” என கடுமையாக தாக்கியுள்ளார். தொடர்ந்து விமர்சனங்கள் அதிகரிக்கவே சல்மான்கான் அந்த ட்வீட்டை அழித்துவிட்டார்.