தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நிமிர்ந்து நில் படத்தை அடுத்து ஜெயம்ரவி அதிகமாக எதிர்பார்த்த படம் பூலோகம். அந்த படத்தில் வடசென்னை பாக்சராக நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கடினமாக உழைத்தார். ஆனால் உழைப்புக்கு பலன் கிடைக்க படம் ரிலீசாகவில்லை. எப்படியும் சில மாதங்களில் வந்து விடும் என்று நினைத்தவருக்கு இப்போது அது கிணற்றில் விழுந்த கல் தான் என்கிற மனநிலை உருவாகிவிட்டது. அதனால் பூலோகம் பற்றி யாராவது வாய் திறந்தாலே அவர்களை வாயை பொத்தி விடுகிறார். மேலும், தற்போது சுராஜ் இயக்கத்தில் நடித்துள்ள சகலகலா வல்லவன் படத்தில் தனக்கு இணையான வேடத்தை காமெடியன் சூரிக்கு விட்டுக்கொடுத்து நடித்திருக்கும் ஜெயம்ரவி, இந்த படத்தை பெரிதாக எதிர்பார்க்கிறார். தான் செய்துள்ள ரொமான்சுக்காக இல்லையென்றாலும் சூரியுடன் செய்துள்ள காமெடிக்காகவாவது படம் தன்னை காப்பாற்றி விடும் என்று எதிர்பார்க்கிறார்.
இதற்கடுத்தபடியாக, ஆகஸ்டு மாதம் அவரது அண்ணன் மோகன்ராஜா இயக்கத்தில் நடித்துள்ள தனி ஒருவன் படமும் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படத்தில் போலீசாக நடித்திருக்கும் ஜெயம்ரவிக்கு, அதிரடி சண்டை காட்சிகளும் இந்த படத்தில் உள்ளதாம். தம்பி சில படங்களில் குத்துச்சண்டை வீரராக நடித்திருப்பதை மனதில் கொண்டு சண்டை காட்சிகளை குத்துச்சண்டை பாணியில் பயிற்சி கொடுக்க சொல்லிவிட்டாராம் மோகன்ராஜா. ஆக, பூலோகம் படத்துக்காக தான் கஷ்டப்பட்டு எடுத்த பயிற்சிகள் இந்த படத்துக்காவது பயன்பட்டிருக்கிறதே என்று உற்சாகமாக நடித்துள்ளாராம் ஜெயம்ரவி.