அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவையடுத்து, அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் பிரபலங்களும் இரங்கற் செய்தியை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ( கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் நண்பி) அப்துல் கலாம் மறைவு குறித்து, டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தி, பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனுஷ்கா சர்மா டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது., ஏபிஜே கலாம் ஆசாத்தின் மறைவு செய்தி தன்னை மிகுந்த துயரத்திற்குள்ளாக்கியுள்ளது. சிறந்த மனிதரை இழந்துவிட்டோம். அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது டுவிட்டர் பாலோயர்கள், தவறை சுட்டிக்காட்டினர். உடனே, அந்த டுவிட்டை டெலீட் செய்த அனுஷ்கா சர்மா, அடுத்ததாக, மறுபடியும்
ஏபிஜே கலாம் ஆசாத்திற்காக வேண்டிக்கொள்கிறேன் என்று பிரார்த்தித்துக்கொள்கிறேன் என்று டுவிட் போட்டார்.
இந்த டுவிட்டிலும், பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பதை, அவரது பாலோயர்கள் சுட்டிக்காட்டியதையடுத்து
ஏபிஜே அப்துல் கலாமின் மறைவு செய்தி தன்னை மிகுந்த துயரத்திற்குள்ளாக்கியுள்ளது. சிறந்த மனிதரை இழந்துவிட்டோம். அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என்று சரியாக டுவிட் செய்தார்.