'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
முன்னாள் ஜனாதிபதி, மக்களின் தலைவர், மாணவர்களின் விடிவௌ்ளி... அப்துல் கலாமின் மறைவிற்கு நாடே கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.
அப்துல் கலாமின் மறைவிற்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு தலைமையில் செயற்குழு கூட்டம் நடந்தது. அதில் அவருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அவர்கள் சார்பில் ஒரு இரங்கல் அறிக்கையும் வௌியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது...
இந்திய நாட்டின் ஜனாதிபதி பதவியில் இருந்து இவரால் அந்தப்பதவிக்கு பெருமை சேர்த்த இளைஞர்களின் கனவு நாயகன் அப்துல் கலாமின் மறைவு, தமிழ் நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திற்கே ஒரு பேரிழப்பாகும்.
ராமேஸ்வரத்தில் அவதரித்து அகிலமெல்லாம் பயணித்து, மனித உயிரின் மேன்மையையும், அணு உலகில் அதிசயத்தையும், மரங்களின் தேவையையும், மனித நேயத்தையும், வருங்கால இந்தியாவின் தூண்களான மாணவ சமுதயாத்தின் வழிகாட்டியாகவும், நீக்கமற நிறைந்து தமது அனுபவத்தையும், ஆற்றலையும், பகிர்ந்தளித்து வந்த கலாம் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
ஓய்வறியாமல் உழைத்து வந்த அந்த மகான் ஓய்வெடுக்கச் சென்றதுபோல் அவரின் மரணம், அனைவரின் மனதிலும் ஒரு அதிர்வலையை உண்டாக்கி உள்ளது. அவரின் நல்ல எண்ணங்களையும், அவரின் 2020 ஆண்டு கனவினையும் செயல்படுத்துவதே நமது தலையாய கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு நாம் செயல்படுவதே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும். அவரின் மறைவுக்கு தமிழ் திரையுலகமே கண்ணீரால் அஞ்சலி செலுத்துகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.