வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவிற்கு அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான டி.ராஜேந்தரும் தனது இரங்கலை, இரங்கற்பாவாக வெளியிட்டுள்ளார்.
கலாம் மறைவு குறித்து, டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள இரங்கற்பா இதோ....
இந்திய விஞ்ஞான உலகின் விருட்சம் ஒன்று
வேரறுந்து வீழ்ந்து விட்டது....
இளைஞர் சமுதாயத்துக்கு
வழிகாட்டிய ஒளி விளக்கொன்று
உடைந்து விட்டது...
அறிவு பெட்டகத்தை சுமந்த
அப்துல் கலாம் எனும்
அற்புதக் கலம் காலக்கடலில்
தன் பயணத்தை நிறுத்திவிட்டது...
நம்மையெல்லாம் கண்ணீர்
கடலில் ஆழ்த்திவிட்டது...
மேகாலயாவில் மாணவர்களிடையே
பேசும்போது...
மேல்வானின் கேக ஆலயா அவரை
அழைத்து விட்டது...
நம்மையெல்லாம்
சோக ஆலயாவில்..
நுழைத்துவிட்டது...
சொல்லால் வேண்டுமானால்
அவர் முன்னாள் ஜனாதிபதி...
செயலால் இந்தியர்கள்
இதயத்தில் என்றுமே
அவர் அழியா அதிபதி....
அவரது மறைவு இந்திய
நாட்டுக்கே ஈடு கட்ட முடியாத இழப்பு...
குடியரசு தலைவராய்
அவர் ஆற்றிய தொண்டு
நம் நெஞ்சை விட்டு நீங்காது
காலம் உள்ளவரை அவர்
புகழ் மங்காது..
என்று டி.ராஜேந்தர் தனது இரங்கற்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.