அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மலையாள நட்சத்திரங்கள், அது நடிகரோ அல்லது நடிகையோ சினிமாவில் நடிப்பதையும் தாண்டி சமூகத்திற்கு உதவும் விதத்தில் தங்களது பங்களிப்பு இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள். மோகன்லால், மம்முட்டி உட்பட சில முன்னணி நடிகர்களும், காவ்யா மாதவன், மஞ்சு வாரியர், ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட சில நடிகைகளும் ஏதாவது ஒரு சமூக அமைப்பில் உறுப்பினர்களாகத்தான் இருக்கின்றனர். முக்கியமான நேரங்களில் அந்த அமைப்பின் கூட்டங்களில் கலந்துகொண்டு, அவற்றின் திட்டங்களை மக்களுக்கு கொண்டுபோய் சேர்க்கின்றனர்.
இப்போது பொதுமக்களின் உயிர்காக்கும் முக்கிய சேவையான ஆம்புலன்ஸ் (102) சேவையை கொச்சின் மாவட்ட எல்லை வரை ஒருமுகப்படுத்துவதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தை ஏஞ்சல்ஸ் (Active Network Group of Emergency Life Savers) என்கிற அமைப்பு தான் அறிமுகப்படுத்துகிறது. இந்த திட்டப்படி நகரிலோ, கிராமத்திலோ எங்கு வசித்தாலும் போன் செய்தால், மூன்று நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் அவர்களது இருப்பிடத்துக்கு வந்துவிடுமாம்.
இந்த திட்டத்தின் தொலைபேசி சேவையை ஊக்கப்படுத்தும் விதமாக அதன் நல்லெண்ண தூதராக பொறுப்பேற்க இருக்கிறார் நடிகர் ஜெயசூர்யா. இதில் தூதராவது குறித்து பேஸ்புக்கில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஜெயசூர்யா. இந்த திட்டம் வரும் ஞாயிறு அன்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தலைமயில் துவக்கி வைக்கப்பட இருக்கிறது.