ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் உடன் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக வந்துள்ள செய்திகளில் சிறிதும் உண்மையில்லை என்றும் அவை வெறும் வதந்திகள் தான். தனக்கு தற்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று பாலிவுட் நடிகை காத்ரீனா கைப் கூறியுள்ளார்.
கடந்த ஜூலை 16ம் தேதி, காத்ரீனா கைப், தனது பிறந்தநாளை, நடிகர் ரன்பீர் கபூருடன் அலிபாக்கில் கொண்டாடியதாகவும், அப்போது ரன்பீர் கபூர், காத்ரீனாவிற்கு, பிளாட்டினம் மற்றும் வைரம் பதிக்கப்பட்ட ஆபரணத்தை, திருமண நிச்சயதார்த்த நினைவாக வழங்கியதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற பான்டோம் படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில், பத்திரிகையாளர்களை சந்தித்த காத்ரீனா கைப் கூறியதாவது, நடிகர் ரன்பீர் கபூர் உடன் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக வந்துள்ள செய்திகளில் சிறிதும் உண்மையில்லை என்றும் அவை வெறும் வதந்திகள் தான். தனக்கு தற்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று கூறினார்.