டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ்த் திரையுலகில் 2002ம் ஆண்டு வெளிவந்த 'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா. தொடர்ந்து 13 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். விக்ரமுடன் ஜோடியாக நடித்த 'சாமி' திரைப்படம் த்ரிஷாவை லேசாகத் திரும்பிப் பார்க்க வைத்தது. தொடர்ந்து விஜய்யுடன் நடித்த 'கில்லி' திரைப்படம் அவரை முன்னணி நாயகிகளில் ஒருவராக உயர்த்தியது. அதே வருடம் தெலுங்கில் 'வர்ஷம்' படத்தில் இப்போதைய 'பாகுபலி' நாயகன் பிரபாஸ் ஜோடியாக நடித்தார். அந்தப் படமும் சூப்பர் ஹிட்டாக தெலுங்குத் திரையுலகத் த்ரிஷாவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.
ஒரு பக்கம் தமிழில் விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி, சிம்பு ஆகியோருடன் நடித்துக் கொண்டே தெலுங்கிலும் அங்குள்ள முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க ஆரம்பித்தார். “நூவொஸ்தாவன்டே நேனொன்தன்டானா, அத்தடு, அல்லரி புல்லுடு, பெங்காரம், ஸ்டாலின், சைனிக்குடு, ஆடவாரி மாடலுக்கு அர்தாலு வேருலே, புஜ்ஜிகாடு, பாடிகார்ட்” என பல வெற்றிப் படங்களில் நடித்தார். தமிழில் “உனக்கும் எனக்கும், அபியும் நானும், விண்ணைத் தாண்டி வருவாயா, மங்காத்தா” ஆகிய படங்கள் த்ரிஷாவை வேறு ஒரு கோணத்தில் காட்டின. கமல்ஹாசனுடன் இணைந்து 'மன்மதன் அம்பு' படத்திலும் நடித்தார்.
கடந்த வருடம் கன்னடத்தில் புனித் ராஜ்குமார் ஜோடியாக நடித்த 'பவர்' படமும் சூப்பர் ஹிட்டானது. தமிழில் 'என்னை அறிந்தால்' படம் மூலம் மீண்டும் பேசப்பட்ட த்ரிஷா தற்போது கமல்ஹாசனுடன் 'தூங்காவனம்' படத்தில் நடித்து வருகிறார். சுந்தர். சி இயக்கத்தில் முதன் முறையாக 'அரண்மனை 2' படத்தில் நடிக்கிறார். த்ரிஷா நடித்து இந்த வாரம் வெளிவர உள்ள 'சகலகலா வல்லவன்' அவருடைய 48வது படமாம். அப்படியென்றால் 'தூங்காவனம், அரண்மனை 2' ஆகிய இரண்டு படங்களில் ஏதோ ஒரு படம் த்ரிஷாவின் 50வது படமாக இருக்கும். தென்னிந்தியத் திரையுலகில் ஒரு நாயகி 50 படங்களில் நடிப்பது சாதாரண விஷயமல்ல. த்ரிஷாவுக்கு அந்தப் பெருமை கிடைத்திருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.