டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெருநாய்களை கொல்வதற்கு ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் வெளியாகிவரும் இந்த நேரத்தில், திரையுலக பிரபலங்கள் சிலர் தெருநாய்களை கொல்லவேண்டாம் என குரல் எழுப்பியுள்ளனர்.. ஆனால் மலையாள நடிகர் மோகன்லாலோ மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் தெருநாய்களை கொன்றாகவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.. அது தவிர்க்க முடியாதது என கூறியுள்ளார். மேலும் தெருநாய்களின் எண்ணிக்கையை வளரவிடாமல் கட்டுப்படுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மோகன்லாலின் கருத்துக்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஷால், தெருநாய்களை கொல்லக்கூடாது, ஒவ்வொருவருக்கும் உயிர்வாழும் உரிமை இருக்கிறது என அவற்றின் மீதான தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்த 'ஸ்டாப் கில்லிங்க் டாக்ஸ்' என்கிற வாசகத்தை ஒரு அட்டையில் எழுதி அதை பிடித்தபடி புகைப்படம் எடுத்து ஆன்லைனில் பதிவிட்டுள்ளார். ஆனால் விஷாலின் இந்த செயலே அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. மலையாள ரசிகர்களில் பலர் பேஸ்புக்கில் விஷாலை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
“நாய்கள் கொல்லப்பட கூடாது என அவற்றின் மீது போலி அன்பு கட்டும் விஷால், அதேபோல தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு வரும் ரசாயனம் கலந்த காய்கறிகளால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதையும் கவனத்தில் வைத்து குரல் கொடுப்பாரா” என கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளனர். ஒருவர் ஒருபடி மேலேபோய் விஷால் வைத்துள்ள ஸ்லோகன் அட்டையில் 'ஸ்டாப் கில்லிங் மலையாளீஸ்' என மாற்றி எழுதி, அதையும் பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.. பாவம்.. தெருநாய்கள் விவகாரத்தில் குரல் கொடுக்கப்போய் ரசாயன காய்கறி விவகாரத்தில் மாட்டிக்கொண்டாரே விஷால்.