Advertisement

சிறப்புச்செய்திகள்

அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

தொடர்கதையாகும் தயாரிப்பாளர்-தொழிலாளர் மோதல் - ஜூலை 27 முதல் ஸ்டிரைக்

25 ஜூலை, 2015 - 11:42 IST
எழுத்தின் அளவு:
Producer-council---FEFSI-clash-continuing

தனியார் நிறுவனமாக இருந்தாலும், அரசு நிறுவனமாக இருந்தாலும் தொழிலாளர்கள் சில உரிமைகள் கேட்டோ, அல்லது சம்பள உயர்வு கேட்டோ நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவார்கள், அது சில வாரம், சில மாதம் நீடிக்கும் பின்பு அது முடிவுக்கு வந்து சகஜநிலை திரும்பும் இதுதான் நடை முறை. ஆனால் தமிழ் திரைப்படத் தயாரிபாளர்களுக்கும், திரைப்பட தொழிலாளர்களுக்குமிடையிலான போராட்டம் ஆண்டுகணக்கில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


23 சங்கங்கள் அடங்கிய பெப்சி


தமிழ் பட தயாரிப்பாளர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற அமைப்பில் ஒருங்கிணைந்திருக்கிறார்கள். அதேபோல திரைப்பட தொழிலாளர்களுக்கென்று 23 பிரிவுகள் உள்ளன. அவை தனித்தனி சங்கங்களாக உள்ளன. இவற்றின் ஒருங்கிணைப்பு அமைப்புதான் பெப்சி. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்பது இதன் விரிவு. ஒரு காலத்தில் தென்னிந்திய திரைப்படங்கள் அனைத்தும் சென்னையில் தயாரானபோது இந்த சங்கம் தென்னிந்திய என்ற அடைமொழிகளோடு உருவானது. ஆனால் தற்போது தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகள் தனித்தனி சங்கங்கள் அமைத்து கொண்ட போதும் சென்னையில் உள்ள சங்கங்கள் மட்டும் தென்னிந்திய சங்கமாக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நளபாக சங்கம் முதல் நடன இயக்குனர்கள் சங்கம் வரை பெப்சியில் அடங்கும்.


23 சங்கங்களில், இயக்குனர்கள் சங்கம், நடன இயக்குனர்கள் சங்கம், கலை இயக்குனர்கள் சங்கம், ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சண்டை கலைஞர்கள் சங்கம் ஆகியவை பொருளாதார அடிப்படையில் வலுவான சங்கங்கள், லைட்மேன் சங்கம், டெக்னீசியன்கள் சங்கம், புரொடக்ஷன் மேனேஜர்கள் சங்கம் போன்றவை மேன் பவரில் வலுவான சங்கங்கள். பெப்சியை வழிநடத்திச் செல்வது பெரும்பாலும் இந்த சங்கங்கள்தான்.


ஆண்டுக்கு 10 சதவீதம் சம்பளம் உயர்வு


உயர்ந்து வரும் விலைவாசி, வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதி இவற்றை கருத்தில் கொண்டு ஆண்டுக்கு 10 சதவிகிதம் ஊதிய உயர்வு தரவேண்டும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 30 சதவிகிதம் சம்பளத்தை உயர்த்தி ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும் என்பது பொதுவான விதிமுறை. கடந்த 4 வருடங்களுக்கு முன்பு வரை இதுதான் நடைமுறையில் இருந்தது.


ஆண்டுக்கு 10 சதவிகித சம்பளம் போதாது என்ற தொழிலாளர்கள் கருதினார்கள். இதனால் ஒவ்வொரு முறையும் சம்பள பேச்சு வார்த்தையின் போது பிரச்னைகள் உருவானது. படங்களின் தொடர் தோல்விகள் 200 படங்களில் 20 படங்களே லாபம் சம்பாதிக்கிறது. தயாரிப்பு செலவுகள் அதிகரித்து விட்டது என்று கூறி 10 சதவிகித உயர்வையே தர இயலாத நிலையில் இருப்பதாக தயாரிப்பாளர் சங்கம் கூறி வந்தது. இதனால் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்தபோது தமிழக அரசின் தொழிலாளர் நல வாரிய ஆணையர் முன்னிலையில் சம்பள உயர்வு பேச்சு வார்த்தை நடந்தது. சில சங்கங்களுடன் பேச்சு வார்த்தை முடிந்திருந்த நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் பதவிக்கே பிரச்சினை வந்தும் அது அப்படியே நின்று போனது.


தற்போது கலைப்புலி தாணு தலைமையில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றிருக்கும் சூழ்நிலையில் 2015-2018ம் ஆண்டுக்கான ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை கடந்த சில வாரங்களாக நடந்து வந்தது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, பெப்சி தலைவர் சிவா தலைமையிலான நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். பெரும்பாலான சங்கங்களுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது. இன்னும் சில அமைப்புகளுடன் மட்டுமே ஒப்பந்தம் செய்ய வேண்டியது இருந்தது.


27ம் தேதி முதல் ஸ்டிரைக்


இந்த நிலையில் ஒப்பந்தம் செய்து கொண்ட சங்கங்கள், ஒப்பந்தம் முடியாத சங்கங்கள் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் அவர்களாகவே ஒரு சம்பளத்தை நிர்ணயம் செய்து கொண்டு தயாரிப்பாளர்களிடம் கேட்டு கெடுபிடி செய்வதாகவும், படப்பிடிப்பை நிறுவத்துவதாகவும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு புகார்கள் குவிந்தது. குறிப்பாக சென்னை பின்னி மில்லில் நடந்து வரும் தனுஷ் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கும் படப்பிடிப்பில் சம்பளத்தை கணிசமாக உயர்த்திகேட்டு பிரச்சினை செய்திருக்கிறார்கள். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், அவர்தான் தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளர். இதனால் பிரச்சினை பெரிதாகி தயாரிப்பாளர் சங்கதிற்கு அதிர்ச்சியை கொடுத்தது. அதன் காரணமாக வருகிற 27ந் தேதி முதல் படப்பிடிப்புகளை நிறுத்தப்போவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.


"பெப்சி தொழிலாளர்களுக்கு முன்பு மாதம் முழுவதும் வேலை இருக்காது. அதனால் பத்து நாள் வேலை பார்த்தாலும் அதில் ஒரு மாத சம்பளத்தை வாங்கிவிட வேண்டும் என்ற நோக்கில் சம்பளத்தை கணிசமாக உயர்த்தினார்கள். இப்போது தயாராகும் படங்களின் எண்ணிகை அதிகரித்து விட்டது. சின்னத்திரை தொடர்கள் தொடர்ந்து வேலை வாய்ப்பு அளிக்கிறது. எனவே மாதம் முழுவதும் வேலை வாய்ப்பு உருவாகி இருக்கும் சூழ்நிலையில் சம்பளத்தை உயர்த்துவதில் நியாயம் இல்லை" என்கிறார் தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஒருவர்.


"நட்சத்திரங்களுக்கு கோடி கணக்கில் கொட்டிக் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களிடம் கணக்கு பார்க்கிறார்கள். பல படங்கு உயர்ந்துவிட்ட விலைவாசி, வீட்டு வாடகை, அதிகரித்து விட்ட குடும்ப செலவு. பென்சன் போன்ற எதிர்கால பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை தயாரிப்பாளர்கள் உணர மறுக்கிறார்கள்" என்கிறார் பெப்சி நிர்வாகி ஒருவர்.


"சின்னத்திரை, செல்போன், வாட்ஸ் அப், பேஸ்புக் என மக்களின் பொழுதுபோக்கிற்கான தளம் விரிவடைந்திருக்கிறது. ஒரு காலத்தில் சினிமாதான் மக்களின் ஒரே பொழுதுபோக்காக இருந்தது. இப்போது எத்தனையோ பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமாவும் ஒன்று என்று ஆகிவிட்டது. இதை உணர்ந்து தயாரிப்பாளர்களும், தொழிலாளர்களும் ஆக்கபூர்வமாப பேசி செயல்பட்டால்தான் சினிமா தொழில் காப்பாற்றப்படும்" என்கிறார்கள். மூத்த தயாரிப்பாளர்கள்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in