17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி |
சின்னத்திரையில் மருமகள், ஜனனி, குங்குமம், கல்கி, நம்ம குடும்பம், ருத்ரா என பல தொடர்களில் நடித்தவர் குஷ்பு. அதோடு, கோடீஸ்வரி, ஜாக்பாட், நம்ம வீட்டு மகாலட்சுமி, அச்சம் தவிர் என பல நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியிருக்கிறார். அதோடு மானாட மயிலாட உள்ளிட்ட சில ரியாலிட்டி ஷோக்களிலும் ஜட்ஜாக இருந்திருக்கிறார்.
இப்படி சின்னத்திரையில், நடிகை, தயாரிப்பாளர், ஆங்கர் என பன்முகம் காட்டிவரும் குஷ்பு, கடைசியாக வேந்தர் தொலைக்காட்சியில் நினைத்தாலே இனிக்கும் என்றொரு நிகழ்ச்சியில் சினிமா நடிகர் நடிகைகளிடம் பேட்டி கண்டு வந்தார்.
இப்போது மீண்டும் அதே போன்றொரு நிகழ்ச்சியை சிம்ப்ளி குஷ்பு என்ற பெயரில் ஜீ தமிழ் சேனலில் நடத்தப்போகிறார் குஷ்பு. இந்த நிகழ்ச்சியில், சினிமாவில் நிற்ககூட நேரமில்லாமல் பிசியாக இருக்கும் பிரபலங்களை அழைத்து வந்து மனம் திறந்து பேச வைக்கப்போகிறாராம் குஷ்பு.
ஆகஸ்ட் 22-ந்தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் இந்த சிம்ப்ளி குஷ்பு நிகழ்ச்சிக்கான ப்ரமோஷனை இப்போதே ஜீ டிவி தொடங்கி விட்டது.