இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஓ காதல் கண்மணி படம் வர்த்தக ரீதியில் வெற்றியடைந்ததால் உற்சாகமாகிவிட்டார் மணிரத்னம். ஓ காதல் கண்மணியின் வெற்றியை மக்கள் மறந்து போவதற்குள் அடுத்தப் படத்தை ஆரம்பித்துவிட வேண்டும் என்ற வேகத்தில் ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பித்துவிட்டாராம். இதற்கிடையில் மணிரத்னத்தின் அடுத்தப் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியானது. கார்த்தி ஹீரோவாக அறிமுகமாவதற்கு முன் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்தவர். அந்த அடிப்படையில் கார்த்தியை அணுகி இருக்கிறாரா?
அதுதான் இல்லை...மணிரத்னத்தின் அடுத்தப் படத்தின் ஹீரோ துல்கர் சல்மான் தான். அந்தப் படத்தில் கார்த்தியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வழக்கம்போல் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க, மீண்டும் இணைகிறார் பி.சி. ஸ்ரீராம். இந்தப் படத்தை தன்னுடைய மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலேயே இயக்க திட்டமிட்டிருக்கிறார் மணிரத்னம். ஓ காதல் கண்மணி படத்தை தமிழகம் முழுக்க வெளியிட்ட ஸ்டுடியோகிரீன் நிறுவனம், மணிரத்னம் இயக்க உள்ள படத்தை தானே தயாரிப்பதாக அணுகியது.
மணிரத்னம் மறுத்துவிட்டாராம்.