ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி ஹிட்டான 'பிரேமம்' படத்தை திருடி ஆன்லைனில் பதிவேற்றியவர்களை ஆன்டி பைரஸி செல் கண்டுபிடித்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.. என்றாலும், இவையெல்லாம் வெறும் போலி நாடகம் என கொதிக்கிறது மலையாள சினிமா எக்சிபிடர்ஸ் கூட்டமைப்பு. ஆனால் இந்த நடவடிக்கையை ஆண்டி பைரஸி செல் எடுக்க துவங்கும் முன்னரே, இந்த கூட்டமைப்பினர் வரும் ஜூலை-9ஆம் தேதி கேரளாவில் உள்ள 'ஏ' கிளாஸ் தியேட்டர்களில் மட்டும் எந்தப்படத்தையும் திரையிடாமல் ஸ்ட்ரைக் செய்து தங்களது ஒற்றுமையான ஆதரவை பிரேமம் படத்திற்கும் அந்த படக்குழுவினருக்கும் தெரிவிக்க முடிவு செய்துள்ளனராம்.
மேலும் இந்த பைரஸியில் ஈடுபடுவோர்ர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே தியேட்டர்களில் தொடர் வேலைநிறுத்தத்தை நிறுத்துவது பற்றி யோசிப்போம் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இப்படி செய்தால் பிரேமம் படத்திற்கு நியாயம் கிடைக்கிறதோ இல்லையோ, வரும் ஜூலை-10ஆம் தேதி வெளியாகவுள்ள பாகுபலியின் மெகா ரிலீஸ் நிச்சயமாக பாதிக்கப்படும். அதுமட்டுமல்ல, ரம்ஜான் ரிலீஸ் படங்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும் என்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.
ஆனால் 'பி' கிளாஸ் தியேட்டர் அதிபர்களோ தங்களுக்கு இந்த ஸ்ட்ரைக்கில் விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்கள். காரணம் இது தேவையில்லாமல் பாகுபலியின் வசூலை முடக்கும் நடவடிக்கை என்றும், அதுவும் தவிர 'பிரேமம்' படம் இதுநாள் வரை ஓடியதிலேயே நினைத்து பார்க்கமுடியாத வசூலை அள்ளிவிட்டதால் இந்த ஸ்ட்ரைக் தேவையில்லை என்றும் அவர்கள் கருதுகின்றனர்.. ஆனாலும் வரும் வெள்ளிக்கிழமைக்குள் நிலைமை சீராகிவிடும் என்று நம்பிக்கையும் தெரிவிக்கின்றனர்.